24/11/2014

ஆண்களுக்கு சமர்ப்பணம்

ஆண் அழத் தெரியாதவன் அல்ல. கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன்.

அன்பில்லாதவன் அல்ல. அன்பை மனதில் வைத்து சொல்லில் வைக்கத் தெரியாதவன்.

வேலை தேடுபவன் அல்ல. தன் திறமைக்கான அங்கிகாரத்தை தேடுபவன்.

பணம் தேடுபவன் அல்ல. தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன்.

சிரிக்கத் தெரியாதவன் அல்ல. நேசிப்பவர்களின் முன் குழந்தையாய் மாறுபவன்.

காதலைத் தேடுபவன் அல்ல. ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையைத் தேடுபவன்.

கரடுமுரடானவன் அல்ல. நடிக்கத் தெரியாமல் கோபத்தைக் கொட்டிவிட்டு வருந்துபவன்.

நல்லுள்ளம் கொண்ட அனைத்து ஆண்களுக்கும் சமர்ப்பணம்.......!!!!

21/11/2014

குட்பை

இறைச்சி பதப்படுத்தும்
தொழிற்சாலையில்
வேலை செய்யும்
ஒருவர்,ஒரு நாள்
மாலை வேலை முடியும்
தருவாயில்
இறைச்சி பதப்படுத்தும்
Freezer அறைக்குள்
எதோ வேலையாக இருந்த
போது எதிர்பாராதவிதமாய்
அதன்
தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது.
உடனே பெரும்
கூச்சலிட்டாலும் அவர்
எழுப்பிய
ஓசை வெளியே யாருக்கும்
கேட்கவில்லை மேலும்
பெரும்பாலானோர்
வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்
...இன்னும் சிறிது நேரத்தில்
ஐஸில்
உறைந்து இறக்கப்போகிறோம்
என்று எண்ணி கவலை அடைந்தார் அவர்.
அப்போது கதவு திறக்கும்
சத்தம் கேட்டது. உயிர்
வந்தவனாய் வெளியே ஓடி வந்தார். தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தான்.
சந்தோஷத்தில்
அவனை கட்டி தழுவிக்கொண்டார். அவனிடம் "நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?"
என்று கேட்டார்.
"சார். நான் இங்க 10
வருசமா வேலை செய்றேன்...நீங்க ஒருத்தர் மட்டும் தான்
என்னையும்
ஒரு மனுசனா மதிச்சு காலைல
வணக்கமும் சாயங்காலம்
குட் பை ரெண்டும்
சொல்றவர்.
இன்னிக்கி காலைல
வணக்கம்
சொன்னீங்க ..ஆனா சாயங்காலம்
உங்களோட குட் பை என்
காதில்
விழவில்லை.உடனே சந்தேகம்
வந்து உள்ள
வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்...அப்போதான் உங்களை
கண்டு பிடிச்சேன் ..."
என்றான்
ஒருவருக்கொருவர்
மற்றவர்களை தரக்குறைவாக
எண்ணாமல் பரஸ்பரம்
மரியாதை செலுத்திக்கொள்வ
து எப்போதுமே நன்மை பயக்கும்
ஒரு விஷயம்
தானே நண்பர்களே.