*மகிழ்ச்சி....*
வேலை....
வேலை....
வேலை....
என....
பணம் என்ற காகிதத்தை சேர்க்க ஓடி ஓடி ....
அன்பை மறந்து....
ஆசைகளை மறந்து....
மனசாட்சியை மறந்து.....
எப்போது பார்த்தாலும்....
கடை....
கடை....
கடை.....
என....
வாழ்க்கைக்கு தேவையானவற்றை தேடாமல்....
பணத்தை மட்டுமே தேடி.....
அதனால் கிடைக்கும் அந்தஸ்தை தேடி....
பேர்....
புகழ்....
கெளரவம்....
பெருமை....
என .....
எல்லாவற்றையும்
தேடி...
ஓடி.....
உள் மனதின் சந்தோஷத்திற்காக.....
செயற்கையான செய்கைகளை செய்து....
அதில் மகிழ்வது போல நடித்து....
நாலு பேருக்கு முன்னால்
நல்லாருக்க வேணும்னு கஷ்டப்பட்டு....
கசங்கி....
நற்பெயர் எடுத்து....
பாருங்க....
இப்ப என்னாச்சுன்னு....
எதுவுமே நம்மகூட
இல்லையே.....
தனித்தனியா இருக்கச்சொல்றாங்க.....
மூணு வேளை சாப்பாடு கிடைச்சா போதும்கிற நிலைமை....
யாருக்காக சம்பாதிச்சமோ....
அவங்க எல்லாரும் தனித்தனியா...
ஆளுக்கொரு ஊர்ல...
ரொம்ப தூரத்துல....
கண்ணுக்கெட்டிய தூரத்துல கூட இல்லாம....
கூப்புடு தூரத்துல கூட இல்லாம....
என்னதங்க சாதிச்சோம்?
இவ்வளவு பணமும்....
வசதியும்....
பெருமையும்....
புகழும்....
கெளரவமும்....
அகம்பாவமும்....
செல்வச்செழுமையும்.....
கார்...
பங்களா....
சுத்தி சுத்தி இடங்கள்....
தொழில்நுட்ப வசதிகள்....
இன்டர்நெட்....
மொபைல்....
இன்ஸ்டாகிராம்.....
எல்லாம் இருந்தும்....
நம் ரத்த சொந்தங்கள்....
ரத்த நாளங்கள்....
நம் உயிரான பந்தங்கள் ....
ஆளாளுக்கு ஒரு இடத்தில்....
மாதக்கணக்கில்
விடுமுறை....
எந்த பிரயோஜனமும் இல்லாமல்....
கவலை தோய்ந்த முகங்களோடு....
கொஞ்சமாவா ஆடி இருப்போம்....
எல்லாவற்றிற்க்கும் சேர்த்து ஒட்டுமொத்த அடி....
அனுபவிச்சே ஆகனும்....
ஊரடங்கு எப்போது முடியும்....
அதற்குள் யார் யாரெல்லாம் அடங்குகிறார்கள்....
யாருக்கும் தெரியாது....
தெரியவும் வேண்டாம்....
கொரோனா....
இது வைரஸ் அல்ல....
நம்மிடம் குடிகொண்டிருக்கும் தேவையற்ற நோய்களான....
புகழ்...
பெருமை....
அந்தஸ்து....
கெளரவம்....
பதவி....
இவை அனைத்தையும் மருந்தே உட்கொள்ளாமல்....
கொரோனா என்ற
ஒற்றை சொல்லின்
பயத்தால் மட்டுமே நமக்கு நாமே சரிசெய்து கொண்டு....
மீண்டும் புது மனிதனாக....
மனசாட்சியுள்ள
மனிதனாக....
மனித நேயம் உள்ள மனிதனாக...
ஒழுக்கம்...
நேர்மை...
பண்பு...
பணிவு....
இவைகளை மதித்து...
எதிரேவரும் மனிதனை....
மனிதனாக மதித்து....
ஒருவருக்கொருவர் அன்போடும்...
ஆதரவோடும்....
உண்மையாக பேசி....
உண்மையை பேசி....
மனதால் மகிழ்ந்து....
சுகத்தில் மகிழ்ந்து...
கஷ்டத்தில்
ஆதரவளித்து....
பெற்றோரை வணங்கி....
மனைவி மக்களோடு பேசி சிரித்து உறவாடி...
கிடைத்ததை கொண்டு வாழ்க்கையை....
அழகாக வாழ்ந்து....
அற்புதமாக
இறப்போமா....
சரி என்பவர்களுக்கு....
கொரரோனாவால்....
நிச்சயம் பாதிப்பில்லை....
நம்மை...
நம்வாழ்க்கை முறையை....
நம் பண்டைய நெறியை....
நம் பண்பாட்டை...
நம் வாழ்வியலை....
நாம் திருத்திக்கொள்ள...
திருந்தி வாழ....
நமக்கு அளிக்கப்பட்டுள்ள
வாய்ப்பே....
*கொரோனா....*
*திருந்தி வாழலாமா*
*இறைவன் துணையோடு*
*நண்பர்களே....*
*சபதமெடுப்போம்...*
*நல்லதே நினை நல்லதே நடக்கும். வளமுடன் வாழ்வோம்*