31/03/2015

IPL 2015

IPL 2015 - Updated squads after the auction:

Chennai Super Kings:

MS Dhoni, Ashish Nehra, Baba Aparajith, Brendon McCullum, Dwayne Bravo, Dwayne Smith, Faf du Plessis, Ishwar Pandey, Matt Henry, Mithun Manhas, Mohit Sharma, Pawan Negi, R Ashwin, Ravindra Jadeja, Samuel Badree, Suresh Raina, Ronit More, Michael Hussey, Rahul Sharma, Kyle Abbott, Irfan Pathan, Pratyush Singh, Ankush Bains, Eklavya Dwivedi, Andrew Tye

Delhi Daredevils:

Jean-Paul Duminy, Kedar Jadhav, Manoj Tiwary, Mohammed Shami, Nathan Coulter-Nile, Quinton De Kock, Saurabh Tiwary, Shahbaz Nadeem, Mayank Agarwal, Imran Tahir, Jayant Yadav, Angelo Mathews, Yuvraj Singh, Amit Mishra, Jaydev Unadkat, Gurinder Sandhu, Shreyas Iyer, CM Gautam, Dominic Muthuswamy, Albie Morkel, Travis Head, Marcus Stoinis, Kona Srikar Bharat, KK Jiyaz, Zaheer Khan

Kings XI Punjab:

Axar Patel, Anureet Singh, Beuran Hendricks, David Miller, George Bailey, Glenn Maxwell, Gurkeerat Singh Mann, Karanveer Singh, Manan Vora, Mitchell Johnson, Parvinder Awana, Rishi Dhawan, Sandeep Sharma, Shardul Thakur, Shaun Marsh, Shivam Sharma, Thisara Perera, Virender Sehwag, Wriddhiman Saha, Murali Vijay, Nikhil Naik, Yogesh Golwalkar

Kolkata Knight Riders:

Gautam Gambhir, Andre Russell, Chris Lynn, Kuldeep Yadav, Manish Pandey, Suryakumar Yadav, Morne Morkel, Patrick Cummins, Piyush Chawla, Robin Uthappa, Ryan ten Doeschate, Shakib Al Hasan, Sunil Narine, Umesh Yadav, Veer Pratap Singh, Yusuf Pathan, James Neesham, Brad Hogg, Aditya Garhwal, Sumit Narwal, KC Cariappa, Vaibhav Rawal, Sheldon Jackson

Mumbai Indians:

Rohit Sharma, Aditya Tare, Ambati Rayudu, Corey Anderson, Harbhajan Singh, Jasprit Bumrah, Josh Hazlewood, Keiron Pollard, Lasith Malinga, Marchant de Lange, Pawan Suyal, Shreyas Gopal, Lendl Simmons, Unmukt Chand, R Vinay Kumar, Parthiv Patel, Aaron Finch, Pragyan Ojha, Mitchell McClenaghan, Akshay Wakhare, Aiden Blizzard, Hardik Pandya, Siddhesh Lad, J Suchith, Nitish Rana, Abhimanyu Mithun

Rajasthan Royals:

Shane Watson, Abhishek Nayar, Ajinkya Rahane, Ankit Nagendra Sharma, Ben Cutting, Deepak Hooda, Dhawal Kulkarni, Dishant Yagnik, James Faulkner, Kane Richardson, Karun Nair, Pravin Tambe, Rahul Tewatia, Rajat Bhatia, Sanju Samson, Steven Smith, Stuart Binny, Tim Southee, Vikramjeet Malik, Chris Morris, Juan Theron, Barinder Singh Saran, Dinesh Salunkhe, Sagar Trivedi, Pardeep Sahu

Royal Challengers Bangalore:

Virat Kohli, AB de Villers, Chris Gayle, Mitchell Starc, Nic Maddinson, Varun Aaron, Yuzvendra Singh Chahal, Rilee Rossouw, Vijay Zol, Yogesh Takawale, Abu Nechim Ahmed, Harshal Patel, Ashoke Dinda, Sandeep Warrier, Manvinder Bisla, Iqbal Abdullah, Dinesh Karthik, Subramaniam Badrinath, Darren Sammy, Sean Abbott, Adam Milne, David Wiese, Jalaj Saxena, Sarfaraz Naushad Khan, Shishir Bhavane

Sunrisers Hyderabad:

Shikhar Dhawan, Ashish Reddy, Bhuvneshwar Kumar, Chama Milind, Dale Steyn, David Warner, Ishant Sharma, Karn Sharma, KL Rahul, Moises Henriques, Naman Ojha, Parveez Rasool, Ricky Bhui, Kevin Pietersen, Eoin Morgan, Kane Williamson, Ravi Bopara, Laxmi Ratan Shukla, Praveen Kumar, Trent Boult, Hanuma Vihari, Prasanth Padmanabhan, Siddarth Kaul
[16/02 9:28 PM] ‪+91 96003 15608‬: CRICKET (IPL 8) - 2015

Schedule :
👉 08.04.2015 - KKR vs MI
👉 09.04.2015 - CSK vs DD
👉 10.04.2015 - KXIP vs RR
👉 11.04.2015 - CSK vs SRH
👉 11.04.2015 - KKR vs RCB
👉 12.04.2015 - DD vs RR
👉 12.04.2015 - MI vs KXIP
👉 13.04.2015 - RCB vs SRH
👉 14.04.2015 - RR vs MI
👉 14.04.2015 - KKR vs CSK
👉 15.04.2015 - KXIP vs DD
👉 16.04.2015 - SHR vs RR
👉 17.04.2015 - MI vs CSK
👉 18.04.2015 - SHR vs DD
👉 18.04.2015 - KXIP vs KKR
👉 19.04.2015 - RR vs CSK
👉 19.04.2015 - RCB vs MI
👉 20.04.2015 - DD vs KKR
👉 21.04.2015 - RR vs KXIP
👉 22.04.2015 - SRH vs KKR
👉 22.04.2015 - RCB vs CSK
👉 23.04.2015 - DD vs MI
👉 24.04.2015 - RR vs RCB
👉 25.04.2015 - MI vs SRH
👉 25.04.2015 - CSK vs KXIP
👉 26.04.2015 - KKR vs RR
👉 26.04.2015 - DD vs RCB
👉 27.04.2015 - KXIP vs SRH
👉 28.04.2015 - KKR vs DD
👉 29.04.2015 - RCB vs RR
👉 30.04.2015 - CSK vs KKR
👉 01.05.2015 - DD vs KXIP
👉 01.05.2015 - MI vs RR
👉 02.05.2015 - RCB vs KKR
👉 02.05.2015 - SRH vs CSK
👉 03.05.2015 - KXIP vs MI
👉 03.05.2015 - RR vs DD
👉 04.05.2015 - CSK vs RCB
👉 04.05.2015 - KKR vs SRH
👉 05.05.2015 - MI vs DD
👉 06.05.2015 - RCB vs KXIP
👉 07.05.2015 - RR vs SRH
👉 08.05.2015 - CSK vs MI
👉 09.05.2015 - KKR vs KXIP
👉 09.05.2015 - DD vs SRH
👉 10.05.2015 - MI vs RCB
👉 10.05.2015 - CSK vs RR
👉 11.05.2015 - SRH vs KXIP
👉 12.05.2015 - DD vs SRH
👉 13.05.2015 - KXIP vs RCB
👉 14.05.2015 - MI vs KKR
👉 15.05.2015 - SRH vs RCB
👉 16.05.2015 - KXIP vs CSK
👉 16.05.2015 - RR vs KKR
👉 17.05.2015 - RCB vs DD
👉 17.05.2015 - SRH vs MI

End of League Phase
👉 18.05.2015 - REST DAY

PLAY - OFFS
👉 19.05.2015 - Qualifier 1
👉 20.05.2015 - Eliminator
👉 21.05.2015 - REST DAY
👉 22.05.2015 - Qualifier 2
👉 23.05.2015 - REST DAY
👉 24.05.2015 - FINAL🏆

பப்பாளியின் பயன்

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....!

* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து......!

* பித்தத்தைப் போக்கும்......!

* உடலுக்குத் தென்பூட்டும்......!

* இதயத்திற்கு நல்லது......!

* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்......!

* கல்லீரலுக்கும் ஏற்றது......!

* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்......!

* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.....!

* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்.....!

* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்......!

*இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்......!

* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது......!

* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.....!

* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது......!

* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது......!

* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்......!

* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது......!

* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்......!

* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்......!

* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது......!

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்......!

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்......!

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை....

படித்துவிட்டு அதிகம் பகிருங்கள்...!

என்றும் உங்களுடன் ,

தத்து பித்து

⭕⭕தத்து பித்து⭕⭕

கண்ணா நீ...
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்…
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதை மாதிரி இருந்தாலும் நெகடிவ்ல பிசாசு மாதிரி தான் இருப்பா..
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே !
வருத்த படாதே !
ஃபீல் பண்ணாதே !
உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள் !
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
காதல் ஒரு மழை
மாதிரி ,
நனையும் போது சந்தோஷம்,
நனைந்த பின்பு ஜலதோஷம்..
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது ?..
ஐந்து கேள்விப்பா..
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே ?..
முதல் மூணும், கடைசி இரண்டும்..
வெரிகுட் கீபிடப்...
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்..இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு ???
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க ?..
டாக்டர் தான் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்..
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
நீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்...
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் ...
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி பாக்குறா.. ”எந்த அளவுக்கு பாக்குறாங்க?”..
கரண்ட் கட்டானாலும் , டார்ச் அடிச்சி பாக்குறா..
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க..
அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை பத்திரமா இருக்கும்..
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
ஒரு காப்பி எவ்வளவு சார் ?..
5 ரூபாய்..
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?...
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா !!!!
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு....
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்..
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பூவைக் கொண்டு எறியுங்கள்..
மீண்டும் கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பூந்தொட்டியைக் கொண்டு எறியுங்கள்..
கொய்யால!
சாவட்டும்...
😉😀😉😀😉😀😉😀

25/03/2015

படித்ததில் பிடித்தது :-)

1. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை
ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.!

2. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு,
சிலருக்கு படிக்கட்டாகவும்,
சிலருக்கு எஸ்கலேட்டராகவும்,
சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது..

3. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும்
ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.!

4. தோற்றுப்போய் வீடு திரும்புகையில்,
தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும்,
வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்.

5. முதியோர் இல்லத்திற்கு
பணம் கொடுங்க,
பொருள் கொடுங்க,
உணவு கொடுங்க,
உடை கொடுங்க..
ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க..
6.
20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு..
அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு..

7. டாக்டரை மறந்து விட்டு
நர்சுகளை ஞாபகம் வைத்திருக்கும்
விசித்திரமான உலகம் இது.!

8.ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட,
ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான்
பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.!

9. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள்,
பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை..

10. அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்..
இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்...
11.
கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்..
மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கிட வேண்டியிருக்கிறது.! 12.

மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள்..
ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்..
மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்..

13. மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை..
அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்..

14. ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான்,
சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்..

15. ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க
சரிதான்..
ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க.

22/03/2015

திருநெல்வேலியை பற்றி

திருநெல்வேலி.....

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் வாழ்பவர்களில் 40% திருநெல்வேலி,தூத்துக்குடியை சேர்ந்தவர்களே. சென்னையின் பெருமைக்கு காரணம் நாங்களே,

தமிழ்நாட்டின் பள்ளி ஆசிரியர்களில் 40% பேரும், கல்லூரி ஆசிரியர்களில் 30% பேரும் நெல்லையையும், அதன் சகோதர மாவட்டமான தூத்துக்குடியை சார்ந்தவர்களே,

தமிழ்நாட்டின் இரண்டாவது நெற்களஞ்சியம் நெல்லை தான்...எனவே எங்கள் தேவை எங்களாலே பூர்த்தி செய்ய படுகிறது,

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒரு திருநெல்வேலியை சேர்ந்த நபர் தெரிந்தவராக கண்டிப்பாக இருப்பர்,

இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இருப்பவர்களில் தமிழர் இருந்தால் அவர் நெல்லையை சேர்ந்தவராகவே இருப்பார், Familiar Industriallists from Nellai are
T V Sundram Iyengar ( TVS Group ), S Anatharamakrishnan ( Amalgamations Group ), Padma Bhushan Shiv Nadar ( Founder Chairman, HCL Technologies ),
AD Padmasingh Issac ( Chairman & MD, Aachi Masala Group ), V G Paneer Das ( Founder, VGP Group ), M G Muthu ( Founder, MGM Group ),Dr.Sivanthi Adhiththanar ( Dina thanthi daily ).

தமிழ்நாட்டில் உள்ள ஒரேஒரு வற்றாத் ஜீவநதி எங்கள் தாமிரபரணி தான்...தென் இந்திய 8 ஜீவநதிகளில் தமிழகத்தின் ஒரே நதி எங்கள் தாமிரபரணி தான். எங்கள் தாமிரபரணி தான் நெல்லை, மற்றும் சகோதர' மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியின் தாகம் தீர்க்கிறது. தமிழக நதிகளில், தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் பயணித்து தமிழ்நாட்டில் கடலில் கலக்கும் ஒரே தமிழக நதி எங்கள் தாமிரபரணி தாய் தான்,

தமிழ்நாட்டின் அழகான தைரியமான பெண்கள் என்றால் எங்கள் நெல்லை, தூத்துக்குடி சகோதரிகள் தான்...சான்று: தமிழ்நாட்டின் பெண் போலீஸ் எண்ணிகையில் 25% பேர் எங்கள் சகோதரிகள் தான். பெண்கள் அதிகமாக கைத்தொழிலில் ஈடுபடும் மாவட்டங்களில் நெல்லை முதலிடம்,

தமிழக புவியியல் அமைப்பில் கடல்,மலை,காடு,வயல்,பாலைவனம் என அனைத்தும் உள்ள ஒரே மாவட்டம் எங்கள் நெல்லை தான். எனவே நெல்லையை குட்டி தமிழ்நாடு என்று கூட சொல்லாம். ஏனென்றால் நெல்லையின் சில ஊர்கள் ஊட்டி, கொடைக்கானல் போலவும், சில ஊர்கள் ராமநாதபுரம் போலவும், சில ஊர்கள் தஞ்சாவூர் போலவும், சில ஊர்கள் நாகப்பட்டினம் போலவும், சில ஊர்கள் அதிக காடுகள் கொண்ட ஈரோடு போலவும் இருக்கிறது. இப்படி ஒரு புவியியல் அமைப்பு உலகில் எந்த நிலப்பரப்பிலும் இல்லை,

தமிழ்நாட்டின் எல்லா மாவட்டத்திற்கும் நிலம் வழியாக செல்ல வேண்டுமானால் பல வழிகளில் செல்லலாம். உதரணமாக சென்னை செல்ல வேண்டுமானால் திருச்சி வழியாகவும் செல்லலாம். கோவை சென்று சேலம் மற்றும் தருமபுரி வேலூர் வழியாக திருச்சி யை தொடாமலே போகலாம். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பல வழிகளில் அதன் அண்டை மாவட்டம் வழியாக செல்லாமல் செல்லலாம். ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் செல்ல வேண்டுமானால் நெல்லை மாவட்டத்தில் நுழையாமல் செல்லவே
முடியாது,

தமிழில் எங்கள் நெல்லை தமிழ்க்கு இணை எங்கள் நெல்லை தமிழ் தான்... "ஏலே, சவுக்கியமா ஏலே"

திருநெல்வேலி,தூத்துக்குடி என நிர்வாக ரீதியாக பிரிந்து இருந்தாலும் எங்கள் இரு மாவட்ட மக்களுக்கும் பின்னி பிணைந்து வாழ்கிறோம். தமிழ்நாட்டில் இப்படி சகோதரத்துவமாக இதுவரை எந்த இரு மாவட்டங்களும் இருக்க வாய்ப்பு கிடைக்கவும் இல்லை. இனிமேல் இருக்கபோவதும் இல்லை,

ஒவ்வொரு வருடமும் பள்ளி கல்வி தேர்ச்சியில் நாங்களே அதிக சதவிகிதம் தேர்ச்சி பெருவோம். சென்னை,கோவை.திருச்சி.
மற்றும் மதுரை யை விட. முதல் முன்று இடங்களில் நெல்லை பிராந்திய பள்ளி மாணவர்கள் இல்லாமல் இதுவரை வந்தது இல்லை, தமிழக 10th & +2 முடிவுகள்,

பாண்டிய மன்னர்களின் முற்கால தலை நகரம் நெல்லை தான்..

இன்னும் 100 வருடங்களுக்கு பிறகு தமிழ் நாட்டில் தண்ணீர் இருக்கும் இடங்கள் என்று ஒன்று இருக்குமானால் அது நெல்லை மற்றும் கன்னியாகுமரி மட்டும் தான்,

உலக சுகாதார நிறுவனம் கணக்கு படி, இந்தியாவில் வாழ தகுதியான
நகரங்கள் என்ற வரிசையில் தமிழ்நாட்டின் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டு மாவட்டத்தில் ஒன்று நெல்லை இன்னொன்று கன்னியாகுமரி.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை. பாரதியார்,
சுப்பிரமணிய சிவா, புலித் தேவன், வீர பாண்டிய கட்டபொம்மன், மாவீரன் சுந்தரலிங்கம்,  வாஞ்சிநாதன், வீரன் அழகுமுத்துகோன், ஒண்டி வீரன், மார்ஷால் நேசமணி, தோழர் ஜீவா, வீரமாமுனிவர், முஹமது இஸ்மாயில், போன்ற பல சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த புண்ணிய பூமி..தமிழ்நாட்டில் அதிக சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த பூமி எங்கள் நெல்லை.கர்ம வீரர் காமராஜர் விருதுநகரில் பிறந்திருந்தாலும் அவருக்கு நெல்லை,தூத்துக்குடி மற்றும் குமரி மக்கள் மீது அன்பு அதிகம்.

நெல்லைகார்களின் அன்புக்கும் எல்லை கிடையாது. கோபத்திற்கும் எல்லை கிடையாது. இயல்பாகவே நெல்லை மக்களுக்கு பிட்யுட்டரி சுரப்பி செயல்பாடு அதிகம்..

மதச்சார்பின்மைக்கு சான்று நாங்கள் தான். நெல்லையில் கோவில்கள் அருகில் மசூதி யை பார்க்கலாம், மசூதி அருகில் சர்ச் யை பார்க்கலாம்..
தமிழ்நாட்டில் இதுவரையில் மதகலவரங்கள் நடைபெறாத மாவட்டங்களில் நெல்லையும் ஒன்று.

Tirunelveli Medical College( govt ) TMC, Govt College of Engg Tirunelveli, Tirunelvili Law College, Govt agricultural college, Govt Siddha Medical College, Govt Veterinary College, என தமிழ்நாட்டின் உயர்கல்வி மையமாக திகழ்கிறது நெல்லை....

தமிழ்நாட்டில் அப்பாவுக்கு அதிக மரியாதை தரும் பசங்க நெல்லை பசங்க தான். பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறைவாக பதிவாகும் மாவட்டங்களில் நெல்லை மற்றும் தூத்துக்குடி முதலிடம். பதிவு திருமணங்கள் குறைவாக நடக்கும் மாவட்டங்களில் திருநெல்வேலியும் ஒன்று. விவாகரத்து குறைவாக நடக்கும் மாவட்டங்களில் நெல்லை முதலிடம். முதியோர் காப்பகங்கள் குறைவாக உள்ள மாவட்டமும் எங்கள் திருநெல்வேலி தான்.

தமிழ்நாட்டில் சென்னை,கோவைக்கு பிறகு அதிக இளைஞர்கள் உள்ள மாவட்டம் நெல்லை தான். " District of Youth "

ஒரு ஆண்டில் வெளியாகும் தமிழ் படங்களில் 50% படங்கள் திருநெல்வேலயை மையமாக கொண்டே வெளிவருகிறது....

அப்புறம் எங்க அல்வா...

14/03/2015

வெற்றி உங்களுக்கே...

ஓய்வுக்காக காட்டுக்குச்
சென்றபோது தனது செல்ல நாயையும்
அழைத்துப் போனார் ஒரு அரசர்.
அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க,
அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்த
ு காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத்
துரத்திக் கொண்டிருந்தது நாய்.
பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான்
வழியைத் தவற
விட்டுவிட்டதை உணர்ந்தது.
அப்போது சற்று தூரத்தில்
புலி ஒன்று வருவதைக் கண்டது நாய்.
அது தன்னை வேட்டையாடத்தான்
வருகிறது
என்பதையும் உணர்ந்தது.
தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில்
சில எலும்புத் துண்டுகளைக் கண்டது.
சட்டென ஒரு காரியம் செய்தது அந்த
நாய் .
புலிக்கு முதுகு காட்டியவண்ணம்
எலும்புத் துண்டுகளின்
முன் அமர்ந்தது.
புலி அருகில் வந்தவுடன்,
"ஆஹா...புலியின் மாமிசம் என்ன,என்ன
சுவை..!
இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக
இருக்குமே"
என்றது நாக்கைச்
சுழற்றியபடியே தனக்குத்தானே பேசியது..
அதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து,
'நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந
்து தப்பினோம்'
என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப்
பின்வாங்கியது.
இந்த சம்பவத்தை மரத்தின்
மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த
குரங்கு ஒன்று,
நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம்
புலியிடமிருந்து தனக்குப்
பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம்
என்றெண்ணி, புலி சென்ற
திசையை நோக்கி விரைந்தது.
அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம்
எனப்
புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து
ஓடித் தப்பமுடியாது என்பதையும்
உணர்ந்து கொண்டது.
குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக்
கூறியதும்
கோபம் கொண்ட புலி,
"என்னுடன் வந்து அந்த நாய் என்ன
பாடுபடுகிறது
என்பதைப் பார்"
என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன்
முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த
இடம் நோக்கி விரைந்தது.
குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக்
கண்ட நாய்,
பழைய இடத்தில் அமர்ந்த
படியே அவற்றைப் பார்க்காதது
போல பாசாங்கு செய்து கொண்டு,
"இன்னொரு புலியைக்
கொண்டு வருவதாகச் சொன்ன
குரங்கை இன்னும் காணோமே!"
என்றது சத்தமாக...
பின் என்ன நடந்திருக்கும் சொல்ல
வேண்டியதில்லை,
நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்..
இந்த கதையின் மூலம் நாம்
தெரிந்து கொள்வது,
எந்த சூழ்நிலையிலும் தன்நம்பிக்கையும்
முயற்சியையும்
விட்டுவிட கூடாது.
ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால்
அதை நினைத்து கவலைப்
படுவதாலோ வருத்தப்படுவதாலோ எந்த
மாறுதலும் நிகழப் போவதில்லை.
அதை நினைத்து கவலைப்
படுவதற்கு பதிலாக
அடுத்தது என்ன செய்யலாம்
என்று யோசித்தால்
நடப்பவையாவது நல்லவையாக நடக்கும்.
ஆம்,நண்பர்களே.,
எந்த சூழ்நிலையிலும் அதிலிருந்து தப்ப
தன்னம்பிக்கையும்,
பதட்டப்படாமல் இருந்தாலே பாதி வெற்றி,
நாம் பயப்படாமல் எதிரில் உள்ளவர்களை
சமாளித்தால் மீதி வெற்றி.
தன்னம்பிக்கை வேண்டும்..
பதட்டம் வேண்டாம்...
வெற்றி உங்களுக்கே..,