02/12/2014

பயம் தயக்கம்

நிலவில் முதன்முதலில் கால்
வைத்தவர் யார்? இந்தக்
கேள்விக்கு யாராயிருந்தாலும்
உடனே பதில் சொல்லிவிடுவீர்கள்,
நீல்ஆம்ஸ்ட்ராங் என்று.
நிலவில் முதன் முதலில் கால்
வைத்திருக்க வேண்டியவர் யார்
தெரியுமா? பல
பேருக்கு தெரியாது என்பதால்
நானே சொல்லி விடுகிறேன் அவர்,
எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான்
நிலவுக்கு சென்ற
அப்பல்லோ விண்கலத்தின் பைலட்.
அதாவது விமானி.
ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப்
படையில் பணிபுரிந்தவர். மேலும்
விண் நடை அனுபவம் உள்ளவர்.
அதனால் அவர் பைலட்டாக
நியமிக்கப்பட்டார்.
நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின்
கப்பல் படையில் வேலைபார்த்தவர்.
மிகுந்த தைரியசாலி என்பதால்தான்
இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்
பட்டார். அவர் கோ-பைலட்
அதாவது இணை விமானி.
இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம்
நிலவை அடைந்ததும்
நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட்
என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில்
சின்ன தயக்கம்.
இடது காலை எடுத்து வைப்பதா?
வலது காலை எடுத்து வைப்பதா?
என்றல்ல. ‘நிலவில் முதன் முதலில்
கால் எடுத்து வைக்கிறோம்.
புவியீர்ப்பு விசையற்ற இடத்தில்
இருக்கிறோம். கால் வைக்கும் இடம்
எப்படி இருக்கும் என்று தெரியாது.
புதை மணலாக
இருந்து உள்ளே இழுத்துவிட்டால்,
எரி மணலாக
இருந்து காலை சுட்டுவிட்டால்’
தயக்கத்தில் மணிக்கணக்காக
தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான்
தாமதித்திருப்பார்.
அதற்குள் நாசாவில்
இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்
டது. கோ பைலட் நெக்ஸ்ட். நீல்
ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த
நொடி காலடி எடுத்துவைத்தார்.
உலக வரலாறு,
ஒரு நொடி தயக்கத்தில்
மாற்றி எழுதப்பட்டது. திறமையும்
தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால்
இன்று ஆல்ட்ரினை யாருக்கும்
தெரியவில்லை.
முதலாவது வருபவரைத்தான் இந்த
உலகம் நினைவில் வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல. தயக்கம், பயம்
இவை எந்த அளவுக்கு நம்
வெற்றியை பாதிக்கும்
என்பதற்கு இதுவே உதாரணம்.
இனி நிலவை பார்க்கும்போதெல்லாம்
இந்தச் சம்பவத்தை நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப்
பெரிய வெற்றிகளைத்
தடுத்துவிடுகிறது. நாம்
எல்லோருமே மிகப்பெரும்
சாதனைகளை படைக்கிற
வல்லமை உடையவர்கள்தான்.
நம்முடைய தயக்கம், பயம், கூச்சம்
இவைதான் நம் முதல் எதிரி.

விருதுநகர் மாவட்டத்தின் சிறப்பு

"விருது"நகர் ....
விருதுநகர் மாவட்டம் தன
பெயரை போலவே விருதுபெறும் வகையில் பல
சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது வேறு எந்த
மாவட்டத்திற்கும் இத்தகைய சிறப்பு இருக்காது என
எண்ணுகிறேன் .
1.ரமண மகரிஷி அவதரித்த இடம் (திருச்சுழி)
2.மூன்று தமிழக முதல்வர்களை தந்த மாவட்டம் .
திருவாளர்கள் 1..குமாரசாமி ராஜ
2.காமராஜர்
3.ஓ.பன்னீர்செல்வம் (பூர்வீகம் ஸ்ரீவில்லிபுத்தூர்)
3..சாத்தூர் சேவு
4. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா.
5.சிவகாசி பட்டாசு ,காலண்டர்,டைரி,பாட
புத்தகங்கள்.
6.இந்தியாவின் வணிக தலைநகரமாக
எண்ணைவித்துக்கள் ,தானியங்கள்,டின்
தொழில்களில்
முற்றொருமை பெற்று விளங்குகிறது.
6.தமிழக அரசின் சின்னமான ஆண்டாள் கோயில்
கோபுரம்
7.சித்தர்கள் இன்றும் வாழ்வதாக நம்பப்படும்
மகாலிங்க மலை.
8.நைட்டீஸ் ,பெண்களின் உள்ளாடைகள்,தயார
ிப்பில் முன்னணயில் உள்ள தளவாய்புரம்.
9.ஆசியாவிலேயே பேண்டஜ் துணிகள் தயாரிப்பில்
சிறந்து விளங்கும் சத்திரப்பட்டி.
10. இன்றும் கைத்தறி நெசவுத்தொழில்
சிறந்து விளங்கும் அருப்புகோட்டை .
11.இந்தியாவையே தன் நடிப்பால் கலக்கிய
ஸ்ரீதேவி என்ற அழகு மயில் பிறந்த ஊர் மீனம்பட்டி.
12. வெள்ளையனுக்கு சிம்ம
சொப்பனமாக விளங்கிய
தியாகி சங்கரதாஸ் பிறந்த ஊர்.
13.தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட
உண்ணா நோன்பு இருந்து உயிர் விட்ட
தியாகி சங்கரலிங்கனார் பிறந்த ஊர் .
14. இருக்கன்குடி ,திருவண்ணாமலை , ஆண்டாள்
கோயில் ,விருதுநகர் பராசக்தி மாரியம்மன்
கோயில் ,திருச்சுழி திருமேனிநாதர் திருகோயில் ,திவ்ய
தேசங்களில் ஒன்றான திருத்தங்கள் நின்ற
நாராயண பெருமாள்.
15.ராஜபாளையம் நாய்
16.ஸ்பின்னிங் மில்கள் அதிக அளவில் உள்ள
ராஜபாளையம்.
17.பிரசித்திபெற்ற ராம்கோ ,ஆலங்குளம்
அரசு சிமென்ட் தொழிற்சாலைகள் .
18. உலக அளவில் முன்னணயில் உள்ள
தீப்பெட்டி தொழில் .
19.வீடு தோறும் கைப்பிடி அரிசி கொடுத்து KVS
கல்வி நிலையங்கள் உருவாகிய ஊர்.
20.தமிழகத்திலேயே முதன் முறையாக மழை நீர்
வடிகால்கள் அமைத்து ஊர் மத்தியில் அமைந்துள்ள
தெப்பத்தில் நீர் தேக்கியது விருதுநகரில் தான்.
21.விருதுநகரில் இருந்து 45 கி.மீ தொலைவில்
சாம்பல் நில அணில்கள் சரணாலயம்
அமைந்துள்ளது. வழக்கமான அணில்களை விட
பெரியதாக, சாம்பல் நிறத்தில் இந்த அணில்
இருக்கும். இந்த அரிய வகை அணில் இந்த
சரணாலயத்தில் அதிகமாக காணப்படுகிறது.
மேலும் பறக்கும் அணில், சிங்கவால் குரங்கு, யானை,
மான் மற்றும் பறவைகள் இங்கு காணப்படுகின்றன.
22.வறுமையின் காரணமாக உயிர் நீத்த
நல்லதங்காள் பிறந்த ஊர்
மல்லி அருகே அர்ஜுனா புரம்.
23. விருதுநகர் எண்ணை புரோட்டா .....
விருதுநகர் டைம்ஸ் வாசகர்களின் தகவல்கள் ......
24.சபரிமலை பக்தர்கள் மற்றும் இதர
கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் கழுத்தில்
அணியும் துளசி மணி மாலை ,ஸ்படிக
மாலை புனைந்து இந்திய முழுவதும் அனுப்பும்
துலுக்கப்பட்டி .
25.வெள்ளையனுக்கு எதிராக தமிழர்
வீரத்தை உலகிற்கு உணர்த்திய மருது சகோதரர்கள் பிறந்த
முக்குளம் .
26.ஈமெயில் கண்டுபிடித்த கண்டுபிடித்த
திரு.சிவா அய்யாதுரை .
27.பல ஆண்டுகளாக
அரசு பொது தேர்வுகளில் முதல் இடம் பிடித்த
மாவட்டம் நமது விருதுநகர்

பனை வெட்டினால் வினை

🌴 பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும் !

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்,

ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்.

24/11/2014

ஆண்களுக்கு சமர்ப்பணம்

ஆண் அழத் தெரியாதவன் அல்ல. கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன்.

அன்பில்லாதவன் அல்ல. அன்பை மனதில் வைத்து சொல்லில் வைக்கத் தெரியாதவன்.

வேலை தேடுபவன் அல்ல. தன் திறமைக்கான அங்கிகாரத்தை தேடுபவன்.

பணம் தேடுபவன் அல்ல. தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன்.

சிரிக்கத் தெரியாதவன் அல்ல. நேசிப்பவர்களின் முன் குழந்தையாய் மாறுபவன்.

காதலைத் தேடுபவன் அல்ல. ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையைத் தேடுபவன்.

கரடுமுரடானவன் அல்ல. நடிக்கத் தெரியாமல் கோபத்தைக் கொட்டிவிட்டு வருந்துபவன்.

நல்லுள்ளம் கொண்ட அனைத்து ஆண்களுக்கும் சமர்ப்பணம்.......!!!!

21/11/2014

குட்பை

இறைச்சி பதப்படுத்தும்
தொழிற்சாலையில்
வேலை செய்யும்
ஒருவர்,ஒரு நாள்
மாலை வேலை முடியும்
தருவாயில்
இறைச்சி பதப்படுத்தும்
Freezer அறைக்குள்
எதோ வேலையாக இருந்த
போது எதிர்பாராதவிதமாய்
அதன்
தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது.
உடனே பெரும்
கூச்சலிட்டாலும் அவர்
எழுப்பிய
ஓசை வெளியே யாருக்கும்
கேட்கவில்லை மேலும்
பெரும்பாலானோர்
வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்
...இன்னும் சிறிது நேரத்தில்
ஐஸில்
உறைந்து இறக்கப்போகிறோம்
என்று எண்ணி கவலை அடைந்தார் அவர்.
அப்போது கதவு திறக்கும்
சத்தம் கேட்டது. உயிர்
வந்தவனாய் வெளியே ஓடி வந்தார். தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தான்.
சந்தோஷத்தில்
அவனை கட்டி தழுவிக்கொண்டார். அவனிடம் "நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?"
என்று கேட்டார்.
"சார். நான் இங்க 10
வருசமா வேலை செய்றேன்...நீங்க ஒருத்தர் மட்டும் தான்
என்னையும்
ஒரு மனுசனா மதிச்சு காலைல
வணக்கமும் சாயங்காலம்
குட் பை ரெண்டும்
சொல்றவர்.
இன்னிக்கி காலைல
வணக்கம்
சொன்னீங்க ..ஆனா சாயங்காலம்
உங்களோட குட் பை என்
காதில்
விழவில்லை.உடனே சந்தேகம்
வந்து உள்ள
வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்...அப்போதான் உங்களை
கண்டு பிடிச்சேன் ..."
என்றான்
ஒருவருக்கொருவர்
மற்றவர்களை தரக்குறைவாக
எண்ணாமல் பரஸ்பரம்
மரியாதை செலுத்திக்கொள்வ
து எப்போதுமே நன்மை பயக்கும்
ஒரு விஷயம்
தானே நண்பர்களே.

02/10/2014

அறிவியல் ஆன்மீகம்

அறிவியல் உண்மை ( ஆன்மீகம் )

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.

அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.

இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள்.

குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள்.

காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா?

இல்லை,

பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.

அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.

காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
சக்தி இருக்கிறது.

அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!!

இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!

ஆச்சர்யம்தான்.

அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?

தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?

இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும்.

மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள்.

அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன.

அது நாலாபுறமும் 75000சதுர
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது!

இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்"

என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது..

படித்ததும் பகிரவும்!!!

அறிவியல் ஆன்மீகம்

அறிவியல் உண்மை ( ஆன்மீகம் )

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.

அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.

இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள்.

குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள்.

காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா?

இல்லை,

பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.

அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.

காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
சக்தி இருக்கிறது.

அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!!

இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!

ஆச்சர்யம்தான்.

அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?

தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?

இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும்.

மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள்.

அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன.

அது நாலாபுறமும் 75000சதுர
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது!

இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்"

என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது..

படித்ததும் பகிரவும்!!!

22/09/2014

ஆத்திசூடி

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
==============================

1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to learn.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

- ஔவையார்

21/09/2014

India is the Best

Mathematician:  How to write  4 in between a 5?

China: Is this a Joke?

Japan: Impossible!

America: The question's wrong!!

UK: Rubbish !!
 
India:  F(IV)E
This is the reason you find Indians everywhere in the world in finance, business, medicine, engineering & arts...
anything to do with optimising your brain!!

British: Can u Swim?
Indian: No
British:  Then a Dog is Better den u because It Swims.
Indian: Can u Swim?
British: Yes!
Indian: Then What's the Difference between u & Dog…
British Shocked,Faints!!
Indian Rocks!  

European : Y do U indians come in all colors, look at us,we R all white..?
Abdul Kalam: Horses too come in different colors but donkeys R all the same..!!!


Send to all Indians all over the globe!!



சரியாக சொன்ன மனைவி

ஓரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய் பட்டார்...

பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை, குணமாகவில்லை என்னசெய்வது என்று யோசித்து கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி..

நீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம் பார்க்ககூடாது என்றார்...
அதிர்ச்சி அடைந்த கணவன் உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா என்றார்

எனக்கென்றும் இல்லை உங்களுக்கு தான் எல்லாம் கெட்டுப்போச்சு.

காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு,  அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக் தின்னுட்டு, பந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஆபிசுக்கு ஓடி, அங்க மாடு மாதிரிஉழைச்சிக்கீறிங்க.

அப்புறம் உங்களுக்கு கீழே உள்ளவங்ககிட்ட கரடி மாதிரி கத்திறீங்க,சயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரி கத்திறீங்க, அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கிறீங்க.

அதனால தான் சொல்றேன் இப்படி இருக்கிற உங்களை கால்நடை டாக்டர்தான் குணப்படுத்த முடியும்.

என்ன சொல்வதென்று கணவன் முழிக்க "என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க"என்று முத்தாய்ப்புடன் முடித்தாள்...

19/09/2014

ரூபே கார்டூ

தேசத்தை நேசிப்பவர்களுக்கானது.
________________________

நமது பிரதமரின் கனவு ரூபே......

இன்று நாம் அனைவரும் ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு வைத்து அதற்கான (ATM) டெபிட் அல்லது (credit) கார்டு  பெற்றிருப்போம், அதன் மூலம் நமக்கு தேவையான 💸 அனைத்தையும் பெறமுடிகிறது. இதில் நமக்கு சேவை செய்ய    MASTER CARD..VISA என பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. நாம் வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும்..வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இவர்களுக்கு சதவிகித அடிப்படையில் பணம் செலுத்தி வருகின்றனர். இப்படி இந்நிறுவனங்கள் பெரும் தொகை ஒவ்வொரு ஆண்டும்  பல்லாயிரம்..கோடிகள்.💴💵💷💶.

இதை அறிந்த நமது பிரதமர் நரேந்திர மோடி இதற்கான மாற்று வழிகளை ஆராய்ந்து  தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார். அது தான் ரூபே கார்டூ தற்போது அனைத்து வங்கிகளிலும் இந்த வகையான ATM cardகள்
கிடைக்கின்றன..உடனே நாம் அனைவரும் தற்போது உபயோகிக்கும் VISA.💳💳 .MASTER CARD.களை புறக்கணித்து விட்டு நம் நாட்டின் "ரூபே"வை உபயோகித்து பொருளாதாரத்தை மீட்போம். பிரதமரின் கனவை நனவாக்குவோம்..