25/10/2019

அசைவமா? சைவமா?

*அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம் #*

தொகுப்பு - *ராஜரிஷி தரணியோகி*

இறை நம்பிக்கை உள்ளவர்கள் ???
அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????
...
இந்த கேள்வியை 
கேட்காத மனிதர்கள் இல்லை 
இதற்கு 
பதில் தராத 
குருவும் இல்லை 
ஆயினும் 
கேள்வி தொடர்கிறது 
...
*இதோ ஓஷோ அவர்களின் பதில்...*
உணவுக்கும் 
இறைவனுக்கும் 
எந்த சம்மந்தமும் இல்லை..
...
உணவுக்கும் 
கடவுள் கோபிப்பார் என்பதற்கும்
எந்த சம்மந்தமும் இல்லை...
....
உணவுக்கு 
கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் 
எந்த சம்மந்தமும் இல்லை.
...

*உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு*
..
*உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு* 
..
*உணவுக்கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு* 
..
*உணவுக்கும் மனிதன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு...*
..
*உணவுக்கும் மனிதன் ஆயுளுக்கும் சம்மந்தம் உண்டு...*

*உணவுக்கும் மனித மனதிற்கும் சம்மந்தம் உண்டு..*
..

*மனதிற்கும் இயற்கைக்கும், இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு..*

------------
1. கர்மாவின் காரணமாக 
பிறவி எடுத்தவன் மனிதன்..
அந்த அதைக் கரைக்கவே
மனித பிறவி...*

2. தாவர உயிரினங்களுக்கு 
கர்ம பதிவுகள் குறைவு 
மாமிச  உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள் அதிகம்...*

3. எந்த 
உணவை 
மனிதன் உண்டாலும் 
அந்த 
உணவான 
உயிர்களின் 
பாவ கணக்கை 
அந்த
மனிதனே அடைக்க வேண்டும்.*
----------- ------------


4. அம்மாவை தேடி அலையும் தாயில்லாத
குஞ்சுகள் மற்றும் குட்டிகள் 
தாயின் மனம் மற்றும்
அந்த குட்டியின் மனம் 
எவ்வாறு 
தேடி தவித்து இருக்கும்? அதன் 
தாயை கொன்று தின்னும்
மனிதன் 
உணரவேண்டியது 
இதுதான்.
அதிக பாசம் உள்ள 
ஆடு கோழி மீன் 
இவைகளை 
மனிதன் உண்பது 
பாச தோஷம் ஆகும். 
அந்த தோஷத்தை 
மனிதன் 
அடைந்தே தீருவான் 
அந்த 
கர்மாவையும் சேர்த்து கரைக்க
ஒருவன் 
தைரியமாக முன்வந்தால் 
அவன் 
தாராளமாக 
அசைவம் உண்ணலாம் 
இதில் 
கடவுளுக்கு என்ன பிரச்சனை ???
------------------ --------------
ஒருவர் 
வங்கியில் 
ஒரு லட்சம் கடன் வாங்குகிறார் 
மற்ற ஒருவர் 
ஒரு கோடி வாங்குகிறார் 
இதில் 
மேனேஜருக்கு என்ன பிரச்சனை 
கடன் வாங்கியவனே 
கடனை கட்ட வேண்டும்.*
------- -------- ---------

6. சில நேரங்களில் 
விரதம் இருப்பது 
உடலுக்கு மட்டும் நல்லதல்ல 
பிறந்த பிறவிக்கும் நல்லதே காரணம்
அந்த விரத நாளில் 
மனிதனால் 
எந்த உயிரும் பாதிக்காததால்...*
--------- ----- -------------

7. காட்டில் கூட
ஆடு மாடு
யானை குதிரை ஒட்டகம்
இவைகளை
மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை.
புலி சிங்கம்
போன்ற அசைவ உணவு உண்ணியே
மிருகம் என்று கூறுகின்றோம்.
ஆக, சைவ உண்ணிகளுக்கு
மிருகம் என்ற பெயர் 
காட்டில் கூட இல்லை..*
------ ------- ------

8. உடலால்
மனித பிறவி சைவம்...
உயிரால்
மனித பிறவி சைவம்...
குணத்தால்
மனித பிறவி
அசைவம் மற்றும் சைவம்.

9.ஆடு, மாடு, மான், யானை
போன்றவை
உடலால் சைவம்
உயிரால் சைவம்
மனதாலும் சைவம்.
---- ----- ---- 

*ஆகவே, மனித பிறவியின் உணவு #சைவமாக இருத்தலே மனிதனின் #தர்மமாகிறது.*
என்பதால்
*அறிவில் சிறந்த நம் முன்னோர்கள் மனித பிறவிக்கு சிறந்தது சைவம் என வழிகாட்டி சென்றார்கள்.*

🙏🙏🙏🙏🙏🙏

14/10/2019

பாட்டி சொல்லும் உண்மை

*💫பாட்டி அடிக்கடி சொல்லுவாள்*✨

நீரால் கோலம் போடாதே
நெற்றியைக் காலியாய் விடாதே
குச்சியைக் கொளுத்தி வீசாதே
இரவில் ஊசியை எடுக்காதே

கால் மேல் காலைப் போடாதே
காலையில் அதிகம் தூங்காதே
தொடையில் தாளம் போடாதே
தரையில் வெறுதே கிடக்காதே

மலஜலம் அடக்கி வைக்காதே
நகத்தை நீட்டி வளர்க்காதே
ஆலயம் செல்லத் தவறாதே
அதிகமாகப் பேசாதே

எண்ணெய் தேய்க்க மறக்காதே
சந்தியில் நீயும் உண்ணாதே
விரிப்பைச் சுருட்ட மறக்காதே
பகலில் படுத்து உறங்காதே

குளிக்கும் முன்பு புசிக்காதே
ஈரம் சொட்ட நிற்காதே
நாமம் சொல்ல மறக்காதே
நல்ல குடியைக் கெடுக்காதே

தீய வார்த்தை பேசாதே
நின்று தண்ணீர் குடிக்காதே
எதையும் காலால் தட்டாதே
எச்சில் பத்தை மறக்காதே

எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே
எந்தன் குடியில் மூத்தோரே
எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே
என்றும் வளமாய்த் தீர்வோரே

*என்ன அழகான வரிகள் இதை முதலில் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே*

05/10/2019

Men vs Women

*Why MEN are important  ??*👨🏻

1. You can't spell (Madam)👩🏻
      without the (Adam)👨🏻in it

2. Neither can you spell (Woman) 👩🏻
       without the (Man)👨🏻

3. You also cannot spell (Female)👩🏻
       without the (Male)👨🏻

4. Nor spell (She)👩🏻
      without the (He)👨🏻

5. You most definitely cannot spell (Mrs)👩🏻
      without the (Mr)👨🏻

6. and finally, in prayers, we continue to say (Amen) �
        and not (A-women)...

*Dedicated to All Wonderful MEN*😄

04/10/2019

பேசும் முறைகள்

பேசும் முறைகள்...

தாயிடம் - அன்பாக பேசுங்கள்..!

தந்தையுடன் - பண்பாக பேசுங்கள்..!

ஆசிரியரிடம் - அடக்கமாக பேசுங்கள்..!

துணைவியுடன் - உண்மையாக பேசுங்கள்..!

சகோதரனிடம் - அளவாக பேசுங்கள்..!

சகோதரியிடம் - பாசத்தோடு பேசுங்கள்..!

குழந்தைகளிடம் - ஆர்வத்தோடு பேசுங்கள்..!

உறவினர்களிடம் - பரிவோடு பேசுங்கள்..!

நண்பர்களிடம் - உரிமையோடு பேசுங்கள்..!

அதிகாரியிடம் - பணிவோடு பேசுங்கள்..!

வியாபாரியிடம் - கறாராக பேசுங்கள்..!

வாடிக்கையாளரிடம் - நேர்மையாக பேசுங்கள்..!

தொழிலாளரிடம் - மனிதநேயத்தோடு பேசுங்கள்..!

அரசியல்வாதியிடம் - ஜாக்கிரதையாக பேசுங்கள்..!

இறைவனிடம் - மெளனமாக பேசுங்கள்..!