11/11/2019

னகர, ணகர சொற்களின் வேறுபாடுகள்

னகர, ணகர சொற்களின் வேறுபாடுகள்

அரன் - சிவன்
அரண் - கோட்டை

அன்னம் - சோறு/ அன்னபறவை
அண்ணம் - வாயின் மேற்பகுதி

ஆனி - ஆனி மாதம்
ஆணி - இரும்பு ஆணி

என்ன - என்ன வேண்டும்
எண்ண - சிந்திக்க / நினைக்க

ஏனை - மற்ற
ஏணை - தொட்டில்

கனம் - பாரம்
கணம் - கூட்டம் / தேவகணம்

கனை - ஒலி / கனைத்தல்
கணை - அம்பு

கன்னி - திருமணமாகாதப் பெண்
கண்ணி - மாலை / பிராணிகளைப் பிடிக்கும் பொறி

தனி - தனிமையான
தணி- குறைதல்

தன்மை - இயல்பு
தண்மை - குளிர்ச்சி

தினை - ஒரு வகை தானியம்
திணை - குலம் / இடம்

தின் - சாப்பிடு
திண் - வலிமை / பலம்

நான் - யான்
நாண் - வெட்கம் / வில்லின் கயிறு

பனி - குளிர்ச்சி
பணி - வேலை
பானம் - குடிக்கும் பானம் / குளிர் பானம்

பேன் - தலையில் வாழும் பேன்
பேண் - காப்பாற்று

மன் - அரசன்
மண் - பூமி/ நிலம்

மனம் - உள்ளம்
மணம் - வாசனை / கல்யாணம்

மனை - வீடு
மணை - அமரும் பலகை

மான் - ஒரு மிருகம்
மாண் - பெருமை

வன்மை - வலிமை
வண்மை - கொடை / ஈகை

சில நகர னகர ணகர வேறுபாட்டுச் சொற்கள்:

இதன் - இதனுடைய ; இதண் - பரண்
உன்னி - நினைத்து; உண்ணி - நாயுண்ணி
என்னாள் - எனது நாள் ; எந்நாள் - எந்த நாள்

கான் - காடு ; காண் - பார்
கன்னி - குமரி ; கண்ணி - தலையில் அணியும் மாலை, தொடரியின் கண்ணி
(கன்னி, குமரி இரண்டும் தனித்தமிழ்ச் சொற்களே... குமரி என்பதைத் தேவையின்றி குமாரி , குமாரன் என நீட்டி ஆரியமாக வழங்குதல் கூடாது)

இதண் - பரண்,,, காவலுக்காக மூங்கில்களால் கட்டப்படும் உயரமான இடம், வீட்டுப் பரண்

 கோன் - அரசன் ; கோண் - வளைவு (கோணம்)
சனம் - ஜனம் (மக்கள்)
சானம் - பெருங்காயம் ; சாணம் - சாணி

 துனி - துன்பம்; துணி - ஆடை,
துனை - வேகம்; துணை - உதவி (எத்துணை என்ற வழக்கு காண்க)

25/10/2019

அசைவமா? சைவமா?

*அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம் #*

தொகுப்பு - *ராஜரிஷி தரணியோகி*

இறை நம்பிக்கை உள்ளவர்கள் ???
அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????
...
இந்த கேள்வியை 
கேட்காத மனிதர்கள் இல்லை 
இதற்கு 
பதில் தராத 
குருவும் இல்லை 
ஆயினும் 
கேள்வி தொடர்கிறது 
...
*இதோ ஓஷோ அவர்களின் பதில்...*
உணவுக்கும் 
இறைவனுக்கும் 
எந்த சம்மந்தமும் இல்லை..
...
உணவுக்கும் 
கடவுள் கோபிப்பார் என்பதற்கும்
எந்த சம்மந்தமும் இல்லை...
....
உணவுக்கு 
கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் 
எந்த சம்மந்தமும் இல்லை.
...

*உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு*
..
*உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு* 
..
*உணவுக்கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு* 
..
*உணவுக்கும் மனிதன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு...*
..
*உணவுக்கும் மனிதன் ஆயுளுக்கும் சம்மந்தம் உண்டு...*

*உணவுக்கும் மனித மனதிற்கும் சம்மந்தம் உண்டு..*
..

*மனதிற்கும் இயற்கைக்கும், இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு..*

------------
1. கர்மாவின் காரணமாக 
பிறவி எடுத்தவன் மனிதன்..
அந்த அதைக் கரைக்கவே
மனித பிறவி...*

2. தாவர உயிரினங்களுக்கு 
கர்ம பதிவுகள் குறைவு 
மாமிச  உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள் அதிகம்...*

3. எந்த 
உணவை 
மனிதன் உண்டாலும் 
அந்த 
உணவான 
உயிர்களின் 
பாவ கணக்கை 
அந்த
மனிதனே அடைக்க வேண்டும்.*
----------- ------------


4. அம்மாவை தேடி அலையும் தாயில்லாத
குஞ்சுகள் மற்றும் குட்டிகள் 
தாயின் மனம் மற்றும்
அந்த குட்டியின் மனம் 
எவ்வாறு 
தேடி தவித்து இருக்கும்? அதன் 
தாயை கொன்று தின்னும்
மனிதன் 
உணரவேண்டியது 
இதுதான்.
அதிக பாசம் உள்ள 
ஆடு கோழி மீன் 
இவைகளை 
மனிதன் உண்பது 
பாச தோஷம் ஆகும். 
அந்த தோஷத்தை 
மனிதன் 
அடைந்தே தீருவான் 
அந்த 
கர்மாவையும் சேர்த்து கரைக்க
ஒருவன் 
தைரியமாக முன்வந்தால் 
அவன் 
தாராளமாக 
அசைவம் உண்ணலாம் 
இதில் 
கடவுளுக்கு என்ன பிரச்சனை ???
------------------ --------------
ஒருவர் 
வங்கியில் 
ஒரு லட்சம் கடன் வாங்குகிறார் 
மற்ற ஒருவர் 
ஒரு கோடி வாங்குகிறார் 
இதில் 
மேனேஜருக்கு என்ன பிரச்சனை 
கடன் வாங்கியவனே 
கடனை கட்ட வேண்டும்.*
------- -------- ---------

6. சில நேரங்களில் 
விரதம் இருப்பது 
உடலுக்கு மட்டும் நல்லதல்ல 
பிறந்த பிறவிக்கும் நல்லதே காரணம்
அந்த விரத நாளில் 
மனிதனால் 
எந்த உயிரும் பாதிக்காததால்...*
--------- ----- -------------

7. காட்டில் கூட
ஆடு மாடு
யானை குதிரை ஒட்டகம்
இவைகளை
மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை.
புலி சிங்கம்
போன்ற அசைவ உணவு உண்ணியே
மிருகம் என்று கூறுகின்றோம்.
ஆக, சைவ உண்ணிகளுக்கு
மிருகம் என்ற பெயர் 
காட்டில் கூட இல்லை..*
------ ------- ------

8. உடலால்
மனித பிறவி சைவம்...
உயிரால்
மனித பிறவி சைவம்...
குணத்தால்
மனித பிறவி
அசைவம் மற்றும் சைவம்.

9.ஆடு, மாடு, மான், யானை
போன்றவை
உடலால் சைவம்
உயிரால் சைவம்
மனதாலும் சைவம்.
---- ----- ---- 

*ஆகவே, மனித பிறவியின் உணவு #சைவமாக இருத்தலே மனிதனின் #தர்மமாகிறது.*
என்பதால்
*அறிவில் சிறந்த நம் முன்னோர்கள் மனித பிறவிக்கு சிறந்தது சைவம் என வழிகாட்டி சென்றார்கள்.*

🙏🙏🙏🙏🙏🙏

14/10/2019

பாட்டி சொல்லும் உண்மை

*💫பாட்டி அடிக்கடி சொல்லுவாள்*✨

நீரால் கோலம் போடாதே
நெற்றியைக் காலியாய் விடாதே
குச்சியைக் கொளுத்தி வீசாதே
இரவில் ஊசியை எடுக்காதே

கால் மேல் காலைப் போடாதே
காலையில் அதிகம் தூங்காதே
தொடையில் தாளம் போடாதே
தரையில் வெறுதே கிடக்காதே

மலஜலம் அடக்கி வைக்காதே
நகத்தை நீட்டி வளர்க்காதே
ஆலயம் செல்லத் தவறாதே
அதிகமாகப் பேசாதே

எண்ணெய் தேய்க்க மறக்காதே
சந்தியில் நீயும் உண்ணாதே
விரிப்பைச் சுருட்ட மறக்காதே
பகலில் படுத்து உறங்காதே

குளிக்கும் முன்பு புசிக்காதே
ஈரம் சொட்ட நிற்காதே
நாமம் சொல்ல மறக்காதே
நல்ல குடியைக் கெடுக்காதே

தீய வார்த்தை பேசாதே
நின்று தண்ணீர் குடிக்காதே
எதையும் காலால் தட்டாதே
எச்சில் பத்தை மறக்காதே

எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே
எந்தன் குடியில் மூத்தோரே
எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே
என்றும் வளமாய்த் தீர்வோரே

*என்ன அழகான வரிகள் இதை முதலில் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே*

05/10/2019

Men vs Women

*Why MEN are important  ??*👨🏻

1. You can't spell (Madam)👩🏻
      without the (Adam)👨🏻in it

2. Neither can you spell (Woman) 👩🏻
       without the (Man)👨🏻

3. You also cannot spell (Female)👩🏻
       without the (Male)👨🏻

4. Nor spell (She)👩🏻
      without the (He)👨🏻

5. You most definitely cannot spell (Mrs)👩🏻
      without the (Mr)👨🏻

6. and finally, in prayers, we continue to say (Amen) �
        and not (A-women)...

*Dedicated to All Wonderful MEN*😄

04/10/2019

பேசும் முறைகள்

பேசும் முறைகள்...

தாயிடம் - அன்பாக பேசுங்கள்..!

தந்தையுடன் - பண்பாக பேசுங்கள்..!

ஆசிரியரிடம் - அடக்கமாக பேசுங்கள்..!

துணைவியுடன் - உண்மையாக பேசுங்கள்..!

சகோதரனிடம் - அளவாக பேசுங்கள்..!

சகோதரியிடம் - பாசத்தோடு பேசுங்கள்..!

குழந்தைகளிடம் - ஆர்வத்தோடு பேசுங்கள்..!

உறவினர்களிடம் - பரிவோடு பேசுங்கள்..!

நண்பர்களிடம் - உரிமையோடு பேசுங்கள்..!

அதிகாரியிடம் - பணிவோடு பேசுங்கள்..!

வியாபாரியிடம் - கறாராக பேசுங்கள்..!

வாடிக்கையாளரிடம் - நேர்மையாக பேசுங்கள்..!

தொழிலாளரிடம் - மனிதநேயத்தோடு பேசுங்கள்..!

அரசியல்வாதியிடம் - ஜாக்கிரதையாக பேசுங்கள்..!

இறைவனிடம் - மெளனமாக பேசுங்கள்..!

18/09/2019

நம் உடலை நேசிப்போம்

1.  உடல் - உணவை கேட்கும் மொழி - பசி

2.  உடல் - தண்ணீரை கேட்கும் மொழி  - தாகம்

3.  உடல்  - ஓய்வை கேட்கும் மொழி  - சோர்வு, தலைவலி

4.  உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.

5.  உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்

6.  உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி -  வாய் கசப்பு மற்றும் பசியின்மை

7.  உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி

8.  உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி

9.  உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி

10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை

11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்

12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்

13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்

       எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம். உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

      நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.

       நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.

       நம் உடலை நேசிப்போம்.....  

நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வணிகம் மட்டும் அல்ல வானமும் வசப்படும்.

இது உங்களுக்கு மட்டும் அல்ல, எனக்கும் சேர்த்துதான்✍💪

19/08/2019

நடப்பு, நாம், அரசு

👉🏽எந்த குழந்தையும் அரசுப் பள்ளியில் சேர்ப்பது இல்லை ஆனால் அரசுப் பள்ளிகளை ஏன் மூடுகிறீர்கள் என்று போராட்டம்.

👉🏽மழைபெய்யும் காலங்களில் மழை நீரை சேமிப்பதற்கு எந்த முயற்சியும் எடுப்பதில்லை, அரசு கொண்டுவந்த மழைநீர் சேகரிப்பு திட்டங்களை வீடுகளில் ஒழுங்காக செயல்படுத்துவதில்லை. ஆனால் தண்ணீர் இல்லாத காலத்தில் அரசை மட்டும் குறை கூறுவது.

👉🏽இங்கு உள்ள அனைவரும் வசதிக்காக கார், பைக் வாகனங்கள் வாங்க வேண்டியது. ஆனால் பெட்ரோல் டீசல், கேஸ் போன்ற ஹைட்ரோகார்பன் எடுக்க கூடாது என்று போராடுவது.

👉🏽முப்பது வருடத்திற்கு முன்னால் ஒரே ஒரு டிவிஎஸ் 50 சிசி வண்டிகள் மட்டுமே வீட்டிற்கு இருந்தது. இப்போது கார், பைக் என வீட்டுக்கு வீடு பல வாகனங்கள், ஆனால் ரோடு போட கூடாது என்று போராடுவது.

👉🏽விவசாயப் பொருட்கள் விலை ஏறினால் அரசை குறை கூறுவது, தக்காளி எப்பவும் கிலோ 5 ரூபாய்க்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பது. அதேசமயம் விவசாயிகளுக்கு ஆதரவு என்று ஒரு போராட்டம்.

👉🏽ஆங்கிலம் கலக்காமல், தமிழ் மொழியில் தொடர்ந்து நான்கு வாக்கியங்கள் பேச முடியவில்லை. ஆனால் மத்திய அரசு தமிழை அழிக்கிறது என்று ஒரு போராட்டம்

👉🏽 தரமான மருத்துவர்கள் இல்லை என்று ஒரு போராட்டம், தரமான மருத்துவர்களை உருவாக்குவதற்கு அரசு நுழைவுத்தேர்வு கொண்டு வந்தால் அதற்கு எதிரான ஒரு போராட்டம்

👉🏽 500 இன்ஜினியரிங் காலேஜ் களில் மாணவர்களைச் சேர்ப்பது. படித்து முடித்து வரும் இன்ஜினியர்கள் வேலை செய்ய தொழிற்சாலையை அமைக்க விடாமல் இடம் எடுப்பதற்கு எதிர்த்து போராடுவது.

👉🏽 சௌகரியத்திற்காக பிரிட்ஜ், கிரைண்டர், வாஷிங்மெஷின், ஏசி பயன்படுத்துவது. ஆனால் மின்சாரத்தை உருவாக்க பவர் பிளான்டை அமைக்க எதிர்த்துப் போராடுவது, மற்றும் மின்சாரம் கொண்டு வருவதற்கு மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பது.

இங்கு நடக்கும் அனைத்து பிரச்சனைக்கும் நாம் தான் காரணமென்று மக்கள் உணரும் வரை, யாரோ ஒருவர் சுயநலத்திற்காக தூண்டி விட்ட போராட்டத்தை, மக்களும் ஏன் போராட்டம், எதற்கு போராட்டம் என்று சிந்திக்காமல் இருந்தால், போராடிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.

04/08/2019

அமைதி-ஆனந்தம்… வாழ்க்கையின் துவக்கமா? முடிவா?

அமைதி-ஆனந்தம்… வாழ்க்கையின் துவக்கமா? முடிவா?
இன்று பலரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? ஆன்மீகப் பாதையில் சென்று அமைதியை நாட வேண்டுமென்றால் ஏதாவதொரு மலையின் குகைக்குப் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டுமென்று நினைக்கிறார்கள். ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அமைதியாயிருக்க மலைக்குப் போகிறீர்கள் என்றால், மலை அமைதியாயிருப்பதாக அர்த்தமே தவிர நீங்கள் அமைதியாயிருப்பதாக அர்த்தமல்ல. இரைச்சல் மிகுந்த சந்தைக்கு நடுவிலும் அமைதியாயிருக்க முடிந்தால்தான், அந்த அமைதி உங்களுடையது என்று அர்த்தம்.

எனவே, வெளிச்சூழலில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும் சரி, அதற்கும் உங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கான வாய்ப்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் ஒரு மேலாளராக இருக்கலாம், குடும்பத்தலைவியாக இருக்கலாம், கசாப்புக் கடைக்காரராகக் கூட இருக்கலாம். அந்த நிலையில் இருந்தபடியே ஆன்மீக வளர்ச்சிக்கு உள்நிலையில் தேவையானவற்றை நீங்கள் செய்து கொண்டிருக்கலாம். உங்கள் வெளிச்சூழலுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒருமுறை கௌதம புத்தர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். பத்துப் பதினைந்து பேர் அவரை சூழ்ந்து கொண்டு கடுமையாக ஏசத் தொடங்கினார்கள். காது கொடுத்து கேட்க முடியாத அளவு கடுமையான வசவுச் சொற்கள். அனைத்தையும் புத்தர் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டார். அவர்கள் சொன்ன எதையும் அவர் புறக்கணிக்கவில்லை. முழு விழிப்புணர்வோடு எல்லாவற்றையும் கேட்டுவிட்டுப் பிறகு சொன்னார். “இன்று மாலை இதே வழியாகத்தான் வருவேன். நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டியிருந்தால் சொல்லலாம்”. இந்தத் தன்மையில் இருக்கிற மனிதரை உங்களால் என்ன செய்ய முடியும்? அச்சத்தின் காரணமாக புத்தர் அப்படி நடந்து கொள்ளவில்லை. அவர் குரல் கொடுத்தால் ஓடோடி வர ஆயிரம் பேர் ஆயத்தமாக இருக்கிறார்கள். ஆனால், தன் வாழ்க்கைமுறை இப்படித்தான் என்று அவர் தீர்மானித்துவிட்டார். அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதென்பது அவர் எடுத்த முடிவு. நீங்கள் அவரை என்ன செய்தாலும் சரி, அமைதியையும் ஆனந்தத்தையும் விட்டுவிட்டு உங்கள் வழிக்கு அவர் திரும்ப மாட்டார். அறிவார்ந்த மனிதர் இப்படித்தானே இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அப்படி இல்லை. யாராவது உங்களை ஒருபக்கம் பிடித்துத் தள்ளினால் தள்ளின பக்கம் போவீர்கள். இன்னொருவர் உங்களை ஒருபக்கம் இழுத்தால், இழுத்த இழுப்பிற்குச் செல்வீர்கள். அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வது என்று நீங்கள் தீர்மானித்ததாகத் தெரியவில்லை. அப்படித் தீர்மானித்திருந்தால் யாரோ, ஒரு முட்டாள் எதையாவது செய்தால், நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள். அமைதியாக இருப்பீர்கள். ஆனால் அப்படியா இருக்கிறீர்கள்? யாராவது ஒரு முட்டாள் எதையாவது செய்தால் அங்கேயே, அந்த இடத்திலேயே எதையாவது செய்து, அவரைவிடப் பெரிய முட்டாள் நீங்கள் என்று நிரூபிக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையை நிறைவான முறையில் நடத்துவதென்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.

நீங்கள் ஒரு குழந்தையாக இருந்தபோது, மனஅமைதி உங்களுக்குள்ளேயே இருந்தது. அதை நீங்கள் வெளியில் தேடவேண்டி வந்ததில்லை. அப்போதும் வெளிச்சூழ்நிலைகள் பலவிதமாகப் போனதுண்டு. ஆனாலும் அமைதியில்லாமல் போகவில்லை. இடையில் ஏதோ நடந்தது. உங்கள் அமைதி காணாமல் போனது. இப்போதெல்லாம் அமைதி என்பது உங்களுக்கு இயல்பான விஷயமாக இல்லை. பிடித்து வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. விட்டால் போய்விடும், இல்லையா? ஏன் இப்படி ஆனது? இந்தப் பிரபஞ்சம் என்பதே, ஒரே சக்தி தன்னை இலட்சக்கணக்கான விதங்களில் வெளிப்படுத்திக் கொள்வதுதான் என்பதை அறிவியல் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துள்ளது. ஒரு சக்தி பேசுகிறது. இன்னொரு சக்தி கேட்கிறது. ஒரு சக்தி பாடுகிறது. ஒரு சக்தி ஆடுகிறது. உங்கள் சக்தி நிலையின் தன்மை அமைதியாக இருந்தால், நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். இதே சக்தி அடுத்த விநாடி ஆவேசமானதாக மாறலாம். அதற்கடுத்த விநாடி ஆனந்தமானதாக மாறலாம். “நீங்கள்” என்று உங்களால் கருதப்படும் சக்தி நிலை வெவ்வேறு தன்மைகளை வெளிப்படுத்துவதை வாழ்க்கை நெடுகப் பார்த்திருப்பீர்கள். சில நேரங்களில் கோபம் கொள்கிறீர்கள். சில நேரங்களில் வெறுப்பை உமிழ்கிறீர்கள். சில நேரங்களில் அன்பைப் பொழிகிறீர்கள். சில நேரங்களில் ஆனந்தமாய் இருக்கிறீர்கள். உங்கள் சக்திநிலை ஏன் இத்தனை விதங்களாக மாறி மாறி வெளிப்படுகிறது? ஒரேயொரு காரணம்தான். உங்கள் வெளிச்சூழல் எப்படியிருக்கிறதோ அதற்கேற்ப நீங்கள் மாறுகிறீர்கள். வெளிச்சூழ்நிலை உங்களை ஆட்டுவிக்கிறது. அதற்கேற்ப நீங்கள் ஆடுவதற்கொரு காரணம் உண்டு. உங்கள் உடல், உங்கள் மனம், இரண்டுமே வெளிச்சூழலில் இருந்து நீங்கள் பெற்றவைதான். உங்கள் உடல், வெளியிலிருந்து நீங்கள் பெறுகிற உணவின் வார்ப்பு. உங்கள் மனம், வெளியிலிருந்து நீங்கள் பெறுகிற தகவல்களின் தொகுப்பு. ஆனால் உங்களுக்குள் இருக்கிற விஷயம் பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லை. இயேசுநாதர் எத்தனையோ விஷயங்களைச் சொன்னார். எத்தனையோ விஷயங்களைச் செய்தார். அவரைப் பல்லாயிரக்கணக்கானவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். கடைசியில் அவர் சொன்னார், “கடவுளின் ராஜ்ஜியம் உங்களுக்குள் இருக்கிறது” என்று. உங்களுக்குள் இருக்கிறது என்றால் உள்நோக்கிப் பார்க்க வேண்டும். உடலையும் மனதையும் அடிப்படையாகக் கொண்டு உங்களை நீங்கள் பார்க்க முடியாது. ஏனெனில் அவை உள்தன்மையின் அம்சங்கள் அல்ல. வெளியிலிருந்து நீங்கள் பெறுகிற அம்சங்கள். உங்களுக்குள் இருக்கிற கடவுளின் ராஜ்ஜியத்தை நீங்கள் இன்னும் கண்டறியாததன் காரணமே, உடல், மனம் என்கிற எல்லைகளுக்குள் நீங்கள் சிறைப்பட்டிருப்பதுதான். ஸ்தூலம் கடந்த ஒன்றை ஐம்புலன்களால் உணரவே முடியாது. எனவே ஸ்தூலம் கடந்த ஒன்றை அனுபவிக்க விரும்புவீர்களென்றால் ஐம்புலன்களின் எல்லைகளை நீங்கள் தாண்ட வேண்டும். இல்லையென்றால், புலன்களுடனேயே போராடிக் கொண்டிருப்பீர்கள்.

உங்கள் உள்தன்மையை ஒரு பழத்தோடு ஒப்பிடுவீர்களானால், உங்கள் ஸ்தூலம் என்பது மேலே இருக்கும் தோலைப் போன்றது. தோலில் ஒட்டியிருக்கும் ஒரு துளி இனிப்பையே பெரிதாக எண்ணுகிறீர்கள். அதைக் கடந்து போனால் ஒரு பழமே உங்களுக்காகக் காத்திருக்கிறது. உங்கள் உள்தன்மையை நீங்கள் உணரத் தொடங்குவீர்களானால், நிகரில்லாத ஆனந்தத்தில் நீங்கள் வாழமுடியும். எனக்குள் நான் உணர்கிற தன்மைக்கு விலையாக இந்த உலகையே தந்தால் கூட நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். அத்தகைய விலை மதிப்பில்லாத பொக்கிஷம் இது. இந்த நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியம். தன்னில் முழுமையாக மூழ்கி, பேரின்பத்தில் திளைத்து, அதேநேரம் வெளியுலகில் இயல்பாகவும் உறுதியாகவும் வாழ்வதற்கான சாத்தியம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதற்கு, சிறிது சக்தியையும் கவனத்தையும் உள்நோக்கித் திருப்ப வேண்டும். இத்தனை காலமாய் உங்கள் கவனம், உங்கள் சக்தி, உங்கள் வாழ்க்கை அனைத்தும் வெளியுலகம் நோக்கியே செலுத்தப்பட்டு வந்திருக்கிறது. சிறிதளவு சக்தியையும் நேரத்தையும் உங்கள் உள்நிலை வளர்ச்சிக்காக செலவிட நீங்கள் தயாராக இருப்பீர்களென்றால், மகத்தான அற்புதங்கள் நிகழும். ஆனந்தத்தின் வெளிப்பாடாகவே நீங்கள் திகழ முடியும். அப்போது உங்கள் தன்மையே மாறிவிடுகிறது. வாழ்வில் நீங்கள் மேற்கொள்ளும் எந்த விளையாட்டையும் அதன் எல்லைவரை சென்று விளையாட முடியும். ஆனால் தோற்க மாட்டீர்கள். வாழ்க்கையை நீங்கள் விரும்பும் விதமாக அமைத்துக்கொள்ள முடியும். ஆனால் வாழ்க்கையால் உங்களை எதுவும் செய்ய முடியாது. அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருந்தால்தான் ஒரு மனிதனால் காரியமாற்ற முடியும். அந்தப் பரிமாணத்தை உள்நிலையிலிருந்து பராமரிக்காவிட்டால் வாழ்க்கையே ஒரு எதேச்சையான நிகழ்வாகிவிடுகிறது. உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மிக நல்ல மனிதர்களாக இருந்தால் நல்லதே நடக்கிறது. அவர்கள் உங்களுக்கு எதிராகத் திரும்பினால் எல்லாவற்றையும் இழந்து விடுகிறீர்கள். அதனால்தான் எல்லோரும், எப்போதும் மிக நல்ல மனிதர்களையே வாழ்வில் சந்திக்க விரும்புகிறார்கள். நீங்கள் மிக நல்ல தன்மையில் இருந்தால், எந்தவிதமான மனிதர்களை எப்போது சந்தித்தாலும், எல்லாச் சூழலிலும் நீங்கள் ஒரே மாதிரியாக வாழ முடியும். இன்னொருவரின் நல்ல குணங்களுக்கும், தகுதிகளுக்கும் நீங்கள் ஏன் அடிமைப்பட்டு வாழ வேண்டும்? எப்போதும் யாராவதொருவர் உங்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? உலகத்தை நீங்கள் முழுமையாகப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டுமே தவிர உலகம் உங்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று ஏங்கக் கூடாது. அமைதி, அன்பு, நல்வாழ்வு போன்றவை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணம் இருக்கிறது. திருமணமாகாதவர்களுக்கான கிளப் ஒன்றில் முற்பகல் நேரத்தில் முதிய மனிதனொருவன் மது பருகிக்கொண்டிருந்தான். உலகம் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் புகைப்பிடித்துக் கொண்டும் மது அருந்திக் கொண்டும் இருந்த அந்த முதியவனைப் பார்த்து ஆச்சரியமடைந்த பெண்ணொருத்தி அருகே சென்று கேட்டாள். “காலை நேரத்தில் இப்படிக் குடித்துக் கொண்டும் புகைபிடித்துக் கொண்டும் இருக்கிறீர்களே, உங்கள் வாழ்வின் ரகசியம் என்ன?” என்று. அவன் சொன்னான், “இன்று நான் அருந்தும் ஐந்தாவது பாட்டில் விஸ்கி இது. நாள் முழுக்க புகைப்பிடிக்கிறேன். விரும்பியதைச் சாப்பிடுகிறேன் இதுதான் என் வாழ்க்கை ரகசியம்” என்று. “ஆச்சரியமாயிருக்கிறதே! உங்கள் வயதென்ன?” என்று கேட்ட போது அவன் பதில் சொன்னான், “22” என்று. எனவே, நன்றாக வாழ்வது என்பது பற்றி அவரவருக்கும் தனித்தனி அபிப்பிராயங்கள் உள்ளன. உண்மையில், ஒரு மனிதர் நன்றாக வாழ்கிறார் என்றால் அவர் அமைதியானவராக, ஆனந்தமானவராக, ஆரோக்கியமானவராக வாழ்கிறார் என்றுதான் பொருள். அமைதியாக வாழ்வது என்பதே இப்போது மகத்தானதொரு விஷயமாகிவிட்டது. தம்மை ஆன்மீகவாதிகள் என்று அழைத்துக் கொள்பவர்கள் கூட, அமைதிதான் வாழ்க்கையின் மிகப்பெரிய இலட்சியம் என்பது போல் பேசுகிறார்கள். அமைதி, வாழ்க்கையின் அடிப்படையான விஷயம். நீங்கள் உங்கள் காலை உணவைச் சாப்பிடக்கூட அமைதி தேவைப்படுகிறது. அப்படியானால் காலை உணவுதான் வாழ்வின் மிகப்பெரிய இலட்சியமா என்ன? நாய் கூடத்தான் காலை உணவு சாப்பிடுகிறது. எனவே அமைதியாய் இருப்பதும், ஆனந்தமாய் இருப்பதும் வாழ்வின் ஆரம்பப் படிகள். அடித்தளங்கள். வாழ்க்கைப் பாடத்தின் அரிச்சுவடிகளே அவைதான்.

03/08/2019

Chicken vs Man

ஒரு கோழிக்குஞ்சு தன் தாய் கோழியை பார்த்து கேட்டது.
ஏம்மா... இந்த மனிதர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள்  இருக்கின்றன?
கோபால்.👨
முருகன். 👨
பழனிச்சாமி 👨
மாயாண்டி 👨
முருகேசன். 👨
ஆனால்  நமக்கு மட்டும் "கோழி" 🐔என்ற  ஒரே பெயர் மட்டும் கூப்பிடுகிறார்கள்.

அதற்கு தாய்கோழி 🐔:
மனிதர்களுக்கு  பல பெயர்கள் உள்ளன.
ஆனால் மனிதன் செத்தபிறகு அவனுக்கு  ஒரே பெயர் " பிணம் "💀💀💀💀💀💀💀
ஆனால் நாம் செத்தபிறகு  நமக்கு பல பெயர்கள் :
சிக்கன் 65.
சிக்கன் புலாவ்.
சில்லி சிக்கன்
சிக்கன் வறுவல்.
சிக்கன் தந்தூரி...
🤑🤑🤑🤓🤓😄😄👍

02/08/2019

Business model is changing

*Economy is not struggling...the business models are changing.*

Below is a very interesting insight :

Often heard nowadays that " _indian Economy is struggling_ ".

Sit back & dispassionately think "is the economy really struggling *or*  are business models struggling ?

Some food for thought:

1) Car sales are going down... *but Ola / Uber are rising.*

2)  Restaurants are going empty... *but home delivery is rising*

3) Tuition classes are not getting students *but online studying is rising*

4) Traders are struggling *but online market sites and reference based direct selling are breaking all records in sales.*

5) Old commission based businesses are snivelling... *but online services, at low cost, are finding takers.*

6) Cell phone bills have reduced & *internet penetration is increasing.*

7) Stable (read "Govt Jobs") are dwindling *but "Start up" jobs offering equity & Flexi work time are expanding.*

8) Jobs seekers are reducing but *job creaters are on the rise*.
Working 40 hrs a week for 40 years is trend of past. *Working for few years and spending quality time in contributing to society is the trend..*

The bitter truth is what we are experiencing is a transition phase
& Any transition is painful for the "well set"...
"The masters of the past".

*_It's challenging for those who's business models are based on ancient data...._*

*_Sunil Gavaskar style 35 not out cannot win one day matches today._*
*_We need a Rohit/Virat style today._*

It's a mystery for those who have never looked beyond traditional methods or have assiduously resisted change of any kind.

Economy is not struggling...
*Business is Changing.*
CHANGING CONSTANTLY..

27/07/2019

General information

*Wonderful questions to  your General Knowledge*

3.  How many teaspoons make a Table spoon?

4 . How many Vedas are there in Hindu Mythology?

6.  How many countries have larger area than India?

7.  What is the Ph value of water?

8.  How many planets are there in Solar System?

10. How many  Millimetres make a Centimetre?

11. How many players are there in a Football team?

12. How many inches make a feet?

15. One-time vehicle tax is valid for how many years?

16. How many feathers are there in a shuttle cock?

17. How many languages are printed in an Indian Currency?

18. How many Chapters are there in Mahabharatha?

19. Which Commonwealth Game was hosted in India in 2010?

20. How many overs per team are there in T-20 cricket? 

21. How many years did Mahatma Gandhi spend in South Africa?

23. How many pairs of chromosomes are there in human body?

24. How many spokes are there in an Ashoka Chakra?

25. What is the qualifying age for becoming a MLA?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
*Don't panic.*

*The question numbers are the answers.*
😇😇😇

15/07/2019

Walking

👇👇👇                                                          _*"Walking"*_
_is the best exercise!!!_                  
                                          🚶🏽
                                     🚶🏽
                                 🚶🏽
                            🚶🏽
                       🚶🏽
                   🚶🏽
              🚶🏽
         🚶🏽

_*Walk Away* 🚶🏽 from arguments that leads you to nowhere but anger._

_*Walk Away* 🚶🏽 from people who deliberately put you down._

_*Walk Away* 🚶🏽 from any thought that reduces your worth._

_*Walk Away* 🚶🏽 from failures and fears that stiffle your dreams._

_*Walk Away* 🚶🏽 from people who do not care for you and who are opportunistic._

_The more you_
_*Walk Away*_ 🚶🏽 _from things that poison your soul, the  happier your life will be._

_*Give Yourself A Walk*_🚶🏽
_Towards love, peace, kindness and goodness_

_Let's do more walking                                      🌹💐🌷_