18/04/2024

அரிசி வகைகள்.

உணவேமருந்து #மருந்தேஉணவு

*உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்*

*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?*

*இதோ*👇

1. *கருப்பு கவுணி அரிசி*

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* :

நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

3. *பூங்கார் அரிசி* :

சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

4. *காட்டுயானம் அரிசி* :

நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5. *கருத்தக்கார் அரிசி* : 

மூலம்,  மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 

6. *காலாநமக் அரிசி* :

புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 

7. *மூங்கில் அரிசி*:

மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 

8. *அறுபதாம் குறுவை அரிசி* :

எலும்பு சரியாகும். 

9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி* :

பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 

10. *தங்கச்சம்பா அரிசி* : 

பல், இதயம் வலுவாகும். 

11. *கருங்குறுவை அரிசி* : 

இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.யோக சக்தியையும் தரும்.

12. *கருடன் சம்பா அரிசி* :

இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13. *கார் அரிசி* :

தோல் நோய் சரியாகும். 

14. *குடை வாழை அரிசி* : 

குடல் சுத்தமாகும். 

15. *கிச்சிலி சம்பா அரிசி* : 

பலம், உற்சாகம், உடல் பளபளப்பு ஆகியவற்றை உண்டாக்கும். தேறாத உடல் தேறும்.

16. *நீலம் சம்பா அரிசி* : 

இரத்த சோகை நீங்கும். 

17. *சீரகச் சம்பா அரிசி* :

அழகு தரும்.  எதிர்ப்பு சத்தி கூடும். 

18. *தூய மல்லி அரிசி* :

உள் உறுப்புகள் வலுவாகும். 

19. *குழியடிச்சான் அரிசி* :

தாய்ப்பால் ஊறும். 

20. *சேலம் சன்னா அரிசி* : 

தசை, நரம்பு,  எலும்பு வலுவாகும். 

21. *பிசினி அரிசி* : 

மாதவிடாய்,  இடுப்பு வலி சரியாகும். 

22. *சூரக்குறுவை அரிசி* :

பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 

23. *வாலான் சம்பா அரிசி* :

சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும்.  ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 

24. *வாடன் சம்பா அரிசி* : 

அமைதியான தூக்கம் வரும்

25. *கை குத்தல்* 

உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.

26. *சிவப்பு  மட்டை அரிசி* 

இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. 

27. *சிவப்பு அரிசி* 

கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

28. *குள்ளகாற் அரிசி* 

இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்

29. *கைக்குத்தல் பொன்னி*

எல்லா வயதினருக்கும் உகந்தது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தரும் மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது 

30. *அன்னமழகி*

மிகவும் இனிப்பு சுவையுள்ள‌ அன்னமழகி அரிசி சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்க கூடியது. உடலுக்கு சுகத்தை கொடுக்கும்.

31. *கல்லுண்டைச்சம்பா* 

இதை உண்பவர்களுக்கு மல்யுத்தக்காரரும் எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும். மிகுந்த வார்த்தை வளமும் உண்டாக்கும்

32 *காடைச்சம்பா*

இந்த அரிசி பிரமேக சுரமும், குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும். விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.

33. *காளான் சம்பா*

உடலுக்கு மலை போன்ற உறுதியையும், சுகத்தையும் தரும். சில வாத ரோகத்தையும் குறைக்கும்.

34. *குறுஞ்சம்பா*

விந்து விருத்தியை உண்டாக்கும். வாத நோயைநீக்கும்.

35. *கைவரை சம்பா*

உடலுக்கு அதிக வலிமையும், சுகமும் உண்டாக்கும். 

36 *சீதாபோகம்*

உடல் பலம், தேக பளபளப்பு, விந்து விருத்தி உண்டாகும். அஜீரணத்தை குறைக்கும்.

37  *புழுகுச்சம்பா*

வனப்பும், அமைதியும், பசியையும், பலமும் உண்டாக்கும். தாகம் நீங்கும்.

38. *மணக்கத்தை*

தோல் நோய்கள் அனைத்தையும் போக்கும். புண்கள், ரணங்கள் ஆகியவற்றை குறைக்கும்.

39 *மணிச்சம்பா*

அளவுக்கு அதிகமாக சிறுநீரை குறைக்கும். குழந்தை, முதியவர்களுக்கு அதிகசுகத்தை உண்டாக்கும்.

07/04/2024

நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

*1.ADULT ஐந்துஎழுத்துக்கள்*
 *அதேபோல YOUTH*
*2.PERMANENT ஒன்பது எழுத்துக்கள்*
 *அதேபோல TEMPORARY.*
*3.GOOD நான்கு எழுத்துக்கள்*
 *அதேபோல EVIL.*
*4.BLACK ஐந்து எழுத்துக்கள்.*
*அதேபோல WHITE.*
*6.LIFE நான்கு எழுத்துக்கள்*
*அதேபோல DEAD.*
*7.HATE நான்கு எழுத்துக்கள்*
*அதேபோல LOVE.*
 *8.ENEMIES ஏழு எழுத்துக்கள்*
 *அதேபோல FRIENDS.*
*9.LYING ஐந்து எழுத்துக்கள்.*
*அதேபோல் TRUTH.*
*10.HURT நான்கு எழுத்துக்கள்.*
*அதேபோல் HEAL.*
*11.NEGATIVE எட்டு எழுத்துக்கள்-அதே போல POSITIVE.*
*12.FAILURE ஏழு எழுத்துக்கள்--அதே போல SUCCESS.*
*13.BELOW ஐந்து எழுத்துக்கள்.*
 *அதேபோல ABOVE.*
*14.CRY மூன்று எழுத்துக்கள்.*
*அதேபோல JOY.*
*15.ANGER ஐந்து எழுத்துக்கள்.*
 *அதேபோல HAPPY.*
*16.RIGHT ஐந்து எழுத்துக்கள்,*
*அதேபோல WRONG.*
*17.RICH நான்கு எழுத்துக்கள்.*
*அதேபோல POOR.*
*18.FAIL நான்கு எழுத்துக்கள்.*
*அதேபோலPASS.*
*19.KNOWLEDGE ஒன்பதுஎழுத்துக்கள்.*
*அதேபோல IGNORANCE.*!!

*வியப்பாக* *இருக்கிறது*
*இந்த ஒற்றுமை!!*

_இதிலிருந்து_ _அறியப்படும் நீதி_ 
_என்ன என்றால்,_

*LIFE is like a double edged sword but the choice we make determines our future.*!!!

இக்கரைக்கு அக்கரை பச்சை

நமக்கு வேண்டியதும் வேண்டாததும்!

1. கன மழைக்கு அஞ்சாதீர்கள். மிதமான மழைக்கு ஏங்காதீர்கள். அதைவிட நல்ல குடைக்காக மட்டும் வேண்டுங்கள். அதுதான் நல்லது.

2. வெள்ளம் வரும்போது மீன்கள் எறும்புகளை உட்கொள்ளும். வெள்ளம் வடிந்த பிறகு எறும்புகள் மீன்களைத் திண்ணும். கால நேரம்தான் அனைத்திற்கும் காரணம். கடவுள் எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் ஒரு வாய்ப்பைக் கொடுப்பார்.

3. நாடகங்களுக்கு செல்லும் போது முன் வரிசையில் உட்கார இடம் கிடைத்தால் பரவாயில்லை என்பீர்கள். திரைப்படங்களுக்குச் செல்லும்போது, கடைசி வரிசைக்கு அடிபோடுவீர்கள். வாழ்க்கையில் நிலைப்பாடு ஒவ்வொன்றும் தொடர்புடையது. நிலையானது அல்ல!

4. சோப்பு உற்பத்திக்கு எண்ணெய் தேவை. எண்ணெயைப் போக்குவதற்கு சோப்பு தேவை. வாழ்க்கையின் இரட்டை நிலைப்பாடு இதுதான்!

5. சரியான ஆசாமியைத் தேர்ந்தெடுப்பது முக்கியமில்லை. கிடைத்த ஆசாமியை சரியாகக் கையாள்வதுதான் முக்கியமனதாகும்!!

6. ஆரம்பத்தில் எத்தனை கவனமாக இருக்கிறோம் என்பதைவிட, கடைசி வரை தொடர்ந்து எத்தனை கவனமாக இருக்கிறோம் என்பதுதான் முக்கியமாகும்!

7. ஒவ்வொரு பிரச்சினைக்கும் (N+1) என்பதுதான் தீர்வு. இதில் N என்பது எத்தனை தீர்வுகளை நீங்கள் முயற்சித்தீர்கள் என்பதைக் குறிக்கும். 1 என்பது நீங்கள் முயற்சிக்காத தீர்வுகளைக் குறிக்கும்

8. நீங்கள் பிரச்சினையில் இருக்கும்போது, அதுதான் முடிவாக இருக்குமோ என்று எண்ணாதீர்கள். அது வாழ்க்கையில் ஒரு வளைவான இடம் அவ்வளவுதான்!

9. மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள வேறுபாடு கடவுள் கொடுக்கிறார், கொடுக்கிறார், விட்டும் கொடுக்கிறார். மன்னித்தும் விடுகிறார். ஆனால் மனிதன் பெறுகிறான், பெறுகிறான். காரியம் முடிந்தவுடன் கடைசியில் கடவுளையே மறந்துவிடுகிறான்!

10. இரண்டுவிதமான மக்கள்தான் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களும்
( பைத்தியக்காரர்களும் ) குழந்தைகளுமாவார்கள். உங்கள் லட்சியங்களை அடைய பைத்தியக்காரகளைப் போல் இருங்கள். அடைந்தபின் குழந்தைகளைப் போல மகிழ்ச்சியடையுங்கள்.

11. மற்றவர்களுடைய உணர்வுகளோடு விளையாடாதீர்கள். நீங்கள் வெற்றி அடையலாம். ஆனால் அந்த மனிதரை நீங்கள் இழக்க நேரிடும்

12. வெற்றிக்கு எஸ்கலேட்டர், லிப்ஃட் எல்லாம் கிடையாது. படிகள் மட்டும்தான் உண்டு!

வாழ்க வளமுடன் நலமுடன்....

24/03/2024

இட்லி - Idly

இட்லி வெந்திருக்குன்னு சொன்னா *Optimism...*
இட்லி வேகலைன்னு சொன்னா *Pessimism...*
இட்லியெல்லாம் சுட முடியாதுன்னு சொன்னா *Feminism...*
இட்லிய 'சுட்டது' யாருன்னு பரபரப்பு கிளப்பின்னா *Journalism...*
இட்லி அரசாள்வோர் சாப்பிட்ட பிறகு தான் நமக்குன்னு சொன்னா *Imperialism...*
இட்லிய வச்சு இட்லி உப்புமா செஞ்சதெல்லாம் *Postmodernism...*
இட்லி மேல Made In Indiaன்னு சீல் வச்சா *Nationalism...*
இட்லி உமக்கு கிடையாதுன்னா *Facism...*
இட்லி ஒரு ரூபான்னு அம்மா மெஸ்ல எல்லோருக்கும் கொடுக்கிறது *Socialism...*
இட்லி என்ன சிறுத்து போயி கிடக்குன்னு சொன்னா 
*Racism...*
இட்லி காசு கொடுத்தாத்தான் கிடைக்கும்னு தெரிஞ்சிக்கிறது *Realism...*
இதுக்குமேல இட்லி கிடையாதுன்னு சொன்னா 
*Capitalism...*
இட்லி மெஷீன்லே பண்ணினா *Modernism...*
இட்லி Fork and Spoon வெச்சி சாப்பிட்டா *Elitism...*
இட்லி NorthIndia-la நல்ல இருக்காதோன்னு நினைச்சா *Skepticism...*
இட்லி நல்லா இல்லைன்னு சொன்னா *Criticism...*
இட்லி மட்டும் தான் நல்ல காலை உணவுன்னு ஒத்தை காலில் நின்றால் *Fanaticism...*
இட்லி நன்றாக செமிச்சால் *Metabolism...*
இட்லி பிடிக்காதவரை எனக்கு பிடிக்காதுன்னு சொன்ன 
*Chauvinism...*
⚪Last One⚪
இட்லியே வேணான்னு எந்திரிச்சு போயிட்டா *Escapism !!!*
*ஒரு இட்லிக்கு இவ்வளவு விளக்கம் தேவையா !?? என்று என்மேல் கடுப்பாகி... என்னை திட்ட நீங்க நினைத்தால், அது *Terrorism...*!!!

04/03/2024

வணிகர், வியாபாரி, தொழில் முனைவோர்

வணிகர் என்றால் என்ன ???

1 சொந்தப் பணத்தில் தொழில் தொடங்குகிறார்.

2 வணிகத்தின் முழுப் பொறுப்பு .

3 ஒரு வணிகத்தை நிறுவ அல்லது நடத்த கடினமாக உழைக்கிறார்.

4 நஷ்டத்திற்கு எந்த அரசும் பொறுப்பல்ல.

5 ஆனால் பல்வேறு வரி வடிவில் லாபத்தில் அரசுக்கு உரிமை உண்டு.

6 தனக்கும் தன் குடும்பத்துக்கும் தன் சொந்தப் பணத்தில் வைத்தியம் செய்கிறான்

7 அனைத்து பயணங்களையும் (குடும்பம் அல்லது வணிகம்) தனது சொந்த பணத்தில் செய்கிறார்.

8 குடும்ப உறுப்பினர்களின் கல்விச் செலவை அவர் தனது சொந்தப் பணத்தில் இருந்து கவனித்துக் கொள்கிறார்.

9 வணிகர் ஒருபோதும் ஓய்வு பெறுவதில்லை அல்லது ஓய்வு பெற்றவுடன் எவரும் அரசாங்கத்திடமிருந்து ஓய்வூதியம் பெறுவதில்லை.

10 வணிகர்களுக்கு எந்தவொரு அகவிலைப்படியும் கிடைக்காது.

11 வணிகருக்கு விடுப்பு இல்லை, அவர் செல்ல வேண்டியிருந்தால், குடும்ப உறுப்பினரின் கூடுதல் கடமை.

12 மிகப் பெரிய விஷயம் என்னவென்றால், ஒரு வணிகர், பொருட்களை விற்ற பிறகு, அரசாங்கத்திடம் இருந்து சம்பளமோ கமிஷனோ பெறாத பொதுமக்களிடமிருந்து வரி வசூலித்து அரசாங்கத்திடம் செலுத்தி விடுகின்றார்., அதிகாரிகள் விதிக்கும் அபராதத்தையும் செலுத்தி விடுகின்றார்.

13 சமுதாய நலன் கருதி நன்கொடை அளிப்பது, உணவு வழங்குவது, சமூக-மத-அரசியல் பணிகளில் பங்களிப்பது போன்றவை.

14. வணிகர்களால் வேலைவாய்ப்பு உருவாகின்றது

15. வணிகர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினருக்கான செலவுகளையும் பல்வேறு சமயங்களில் ஏற்றுக் கொள்கின்றார்.

 மாறாக,

 அரசு வேலையில், 
அவரது கடின உழைப்புக்கு சம்பளம், உதவித்தொகை, பயணப்படி, குடும்பம் மற்றும் ஓய்வு பெற்றவுடன் நிலையான அகவிலைப்படி ஓய்வூதியம் என அனைத்தும் உள்ளது. இத்தனைக்குப் பிறகும் ஒரு மாதத்தில் குறைந்தது 4 முதல் 6 விடுமுறைகள் கிடைக்கும்.

  நாமும் நம் நாடும் நம் அரசியல் அமைப்பு சட்டங்களும் எங்கே போகிறது என்று சிந்தியுங்கள்.

 இப்போது வணிகர்களை மரியாதையுடன் நடத்துவது அவசியம். அரசு, நிர்வாகம், பொதுமக்கள் அனைவரும் தங்கள் எண்ணங்களில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். 
படித்தேன் பகிர்ந்தேன் 🙏🏼