02/12/2014

பயம் தயக்கம்

நிலவில் முதன்முதலில் கால்
வைத்தவர் யார்? இந்தக்
கேள்விக்கு யாராயிருந்தாலும்
உடனே பதில் சொல்லிவிடுவீர்கள்,
நீல்ஆம்ஸ்ட்ராங் என்று.
நிலவில் முதன் முதலில் கால்
வைத்திருக்க வேண்டியவர் யார்
தெரியுமா? பல
பேருக்கு தெரியாது என்பதால்
நானே சொல்லி விடுகிறேன் அவர்,
எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான்
நிலவுக்கு சென்ற
அப்பல்லோ விண்கலத்தின் பைலட்.
அதாவது விமானி.
ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப்
படையில் பணிபுரிந்தவர். மேலும்
விண் நடை அனுபவம் உள்ளவர்.
அதனால் அவர் பைலட்டாக
நியமிக்கப்பட்டார்.
நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின்
கப்பல் படையில் வேலைபார்த்தவர்.
மிகுந்த தைரியசாலி என்பதால்தான்
இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்
பட்டார். அவர் கோ-பைலட்
அதாவது இணை விமானி.
இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம்
நிலவை அடைந்ததும்
நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட்
என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில்
சின்ன தயக்கம்.
இடது காலை எடுத்து வைப்பதா?
வலது காலை எடுத்து வைப்பதா?
என்றல்ல. ‘நிலவில் முதன் முதலில்
கால் எடுத்து வைக்கிறோம்.
புவியீர்ப்பு விசையற்ற இடத்தில்
இருக்கிறோம். கால் வைக்கும் இடம்
எப்படி இருக்கும் என்று தெரியாது.
புதை மணலாக
இருந்து உள்ளே இழுத்துவிட்டால்,
எரி மணலாக
இருந்து காலை சுட்டுவிட்டால்’
தயக்கத்தில் மணிக்கணக்காக
தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான்
தாமதித்திருப்பார்.
அதற்குள் நாசாவில்
இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்
டது. கோ பைலட் நெக்ஸ்ட். நீல்
ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த
நொடி காலடி எடுத்துவைத்தார்.
உலக வரலாறு,
ஒரு நொடி தயக்கத்தில்
மாற்றி எழுதப்பட்டது. திறமையும்
தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால்
இன்று ஆல்ட்ரினை யாருக்கும்
தெரியவில்லை.
முதலாவது வருபவரைத்தான் இந்த
உலகம் நினைவில் வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல. தயக்கம், பயம்
இவை எந்த அளவுக்கு நம்
வெற்றியை பாதிக்கும்
என்பதற்கு இதுவே உதாரணம்.
இனி நிலவை பார்க்கும்போதெல்லாம்
இந்தச் சம்பவத்தை நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப்
பெரிய வெற்றிகளைத்
தடுத்துவிடுகிறது. நாம்
எல்லோருமே மிகப்பெரும்
சாதனைகளை படைக்கிற
வல்லமை உடையவர்கள்தான்.
நம்முடைய தயக்கம், பயம், கூச்சம்
இவைதான் நம் முதல் எதிரி.

விருதுநகர் மாவட்டத்தின் சிறப்பு

"விருது"நகர் ....
விருதுநகர் மாவட்டம் தன
பெயரை போலவே விருதுபெறும் வகையில் பல
சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது வேறு எந்த
மாவட்டத்திற்கும் இத்தகைய சிறப்பு இருக்காது என
எண்ணுகிறேன் .
1.ரமண மகரிஷி அவதரித்த இடம் (திருச்சுழி)
2.மூன்று தமிழக முதல்வர்களை தந்த மாவட்டம் .
திருவாளர்கள் 1..குமாரசாமி ராஜ
2.காமராஜர்
3.ஓ.பன்னீர்செல்வம் (பூர்வீகம் ஸ்ரீவில்லிபுத்தூர்)
3..சாத்தூர் சேவு
4. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா.
5.சிவகாசி பட்டாசு ,காலண்டர்,டைரி,பாட
புத்தகங்கள்.
6.இந்தியாவின் வணிக தலைநகரமாக
எண்ணைவித்துக்கள் ,தானியங்கள்,டின்
தொழில்களில்
முற்றொருமை பெற்று விளங்குகிறது.
6.தமிழக அரசின் சின்னமான ஆண்டாள் கோயில்
கோபுரம்
7.சித்தர்கள் இன்றும் வாழ்வதாக நம்பப்படும்
மகாலிங்க மலை.
8.நைட்டீஸ் ,பெண்களின் உள்ளாடைகள்,தயார
ிப்பில் முன்னணயில் உள்ள தளவாய்புரம்.
9.ஆசியாவிலேயே பேண்டஜ் துணிகள் தயாரிப்பில்
சிறந்து விளங்கும் சத்திரப்பட்டி.
10. இன்றும் கைத்தறி நெசவுத்தொழில்
சிறந்து விளங்கும் அருப்புகோட்டை .
11.இந்தியாவையே தன் நடிப்பால் கலக்கிய
ஸ்ரீதேவி என்ற அழகு மயில் பிறந்த ஊர் மீனம்பட்டி.
12. வெள்ளையனுக்கு சிம்ம
சொப்பனமாக விளங்கிய
தியாகி சங்கரதாஸ் பிறந்த ஊர்.
13.தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட
உண்ணா நோன்பு இருந்து உயிர் விட்ட
தியாகி சங்கரலிங்கனார் பிறந்த ஊர் .
14. இருக்கன்குடி ,திருவண்ணாமலை , ஆண்டாள்
கோயில் ,விருதுநகர் பராசக்தி மாரியம்மன்
கோயில் ,திருச்சுழி திருமேனிநாதர் திருகோயில் ,திவ்ய
தேசங்களில் ஒன்றான திருத்தங்கள் நின்ற
நாராயண பெருமாள்.
15.ராஜபாளையம் நாய்
16.ஸ்பின்னிங் மில்கள் அதிக அளவில் உள்ள
ராஜபாளையம்.
17.பிரசித்திபெற்ற ராம்கோ ,ஆலங்குளம்
அரசு சிமென்ட் தொழிற்சாலைகள் .
18. உலக அளவில் முன்னணயில் உள்ள
தீப்பெட்டி தொழில் .
19.வீடு தோறும் கைப்பிடி அரிசி கொடுத்து KVS
கல்வி நிலையங்கள் உருவாகிய ஊர்.
20.தமிழகத்திலேயே முதன் முறையாக மழை நீர்
வடிகால்கள் அமைத்து ஊர் மத்தியில் அமைந்துள்ள
தெப்பத்தில் நீர் தேக்கியது விருதுநகரில் தான்.
21.விருதுநகரில் இருந்து 45 கி.மீ தொலைவில்
சாம்பல் நில அணில்கள் சரணாலயம்
அமைந்துள்ளது. வழக்கமான அணில்களை விட
பெரியதாக, சாம்பல் நிறத்தில் இந்த அணில்
இருக்கும். இந்த அரிய வகை அணில் இந்த
சரணாலயத்தில் அதிகமாக காணப்படுகிறது.
மேலும் பறக்கும் அணில், சிங்கவால் குரங்கு, யானை,
மான் மற்றும் பறவைகள் இங்கு காணப்படுகின்றன.
22.வறுமையின் காரணமாக உயிர் நீத்த
நல்லதங்காள் பிறந்த ஊர்
மல்லி அருகே அர்ஜுனா புரம்.
23. விருதுநகர் எண்ணை புரோட்டா .....
விருதுநகர் டைம்ஸ் வாசகர்களின் தகவல்கள் ......
24.சபரிமலை பக்தர்கள் மற்றும் இதர
கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் கழுத்தில்
அணியும் துளசி மணி மாலை ,ஸ்படிக
மாலை புனைந்து இந்திய முழுவதும் அனுப்பும்
துலுக்கப்பட்டி .
25.வெள்ளையனுக்கு எதிராக தமிழர்
வீரத்தை உலகிற்கு உணர்த்திய மருது சகோதரர்கள் பிறந்த
முக்குளம் .
26.ஈமெயில் கண்டுபிடித்த கண்டுபிடித்த
திரு.சிவா அய்யாதுரை .
27.பல ஆண்டுகளாக
அரசு பொது தேர்வுகளில் முதல் இடம் பிடித்த
மாவட்டம் நமது விருதுநகர்

பனை வெட்டினால் வினை

🌴 பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும் !

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்,

ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்.