17/09/2020

காய்கறிக் குறள்

✍️ *காய்கறிக் குறள்*

*தக்காளி எப்போதும் உட்கொண்டால் தரணியில் எக்காலும் நோயில்லை காண்.*

*எலுமிச்சை புளித்தாலும் எடுத்ததை உட்கொள்ள எலும்புக்கு வலு சேர்க்குமே*

*வெங்காயம் இல்லாச் சாம்பார் எஞ்ஞான்றும் தங்காதே நாவில் ருசி.*

*பொல்லாத பேரையும் நல்லவ ராக்கும் புடலங்காய் போற்றிச் சுவை.*

*தள்ளாத வயதிலும் உள்ளே தள்ளுவாய் முள்ளங்கி மூன்றினைத் தினமும்*. 

*வெண்டைக்காய் இருக்கையில் சுண்டை எந்நாளும் தொண்டையில் இறங்காது காண்.*

*வள்ளிக் கிழங்குண்ணார் வையத்தில் வாழ்ந்தும் வாழாதார் என்பது வழக்கு*.   

*கத்தரி உண்பாரே உண்பார் மற்றெல்லாம் இத்தரையில பித்தருக்குச் சமமெனக்கொள்.*

*பூசணியைச் சேர்த்தாரே புண்ணியர் பூவுலகில் புகழோடு வாழ்வார் அவர்* .

*காய்கறியைத் தின்னாதார் வாழ்க்கை எப்போதும் நோய்நொடியில் வீழ்ந்து கெடும்.*

*முருங்கைக்காய் ருசித்தாரே ருசித்தார் மற்றோரெல்லாம் வெறுங்கையில் முழம் போடுவர்*

*காரிருளில் கண்தெரிய வேண்டுமெனில் பாரிலுள்ள கரிசலாங் கண்ணியைச் சேர்.*

*இரும்பைப் போல் இதயமது வேண்டுமெனில் கரும்பைப் போய் விரும்பிச்சுவை* 

*உரிக்க உரிக்கத் தோல்தான் வெங்காயம் என்றாலும் செரிக்குமோ உரிக்காவிடில்.*

*பறித்த உடன் உண்ணுவீர் பரங்கியை எப்போதும் பலனது வேண்டுமெனில்.*

*பாகற்காய் கசக்கும் என்பதால் சீண்டாதார் சோகத்தில் சேர்ந்து விழுவர்*.

*வெல்லத்தில் இரும்புண்டு ஆகையினால் சாப்பாட்டில் ஒரு துண்டு சேர்த்துச்சமை.* 

*வாழ்வதனால் ஆய பயனென்கொல் வாழைக்காய் தாழ்வெனெவே எண்ணு பவர்.*

*கேரட்டைச் சேர்க்காத சமையல் கிணற்றுக்குள் தேரை வாழ்ந்த கதை*

*பீடுநடை போடுதல் வேண்டுமெனின் தினமும் பீட்ரூட்டை உணவில் சமை*.

*கொத்தவரை பீன்ஸ் முட்டைகோஸ் எல்லாமே சத்தே எனவே சரியாய் உணர்* 

*கறிவேப்பிலை மல்லி கடுகு சேராதோர் சொறி பிடித்தோடுவார் காண்.*

*பொன்னிற மேனி வேண்டுமெனில் நீயந்த பொன்னாங் கண்ணியைச் சேர்* 

*கண் இருந்தும் குருடரே காசினியில்*
*காய் கறியை உண்ணாதவர்.*      

🎊💎🎊🌟🎊💎🎊