19/08/2014

தமிழ் மருத்துவம் மற்றும் உணவுகள்

இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. நாம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகும். இஞ்சிக்கு  ஞாபகசக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்து கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி  ஏற்பட்டால் இஞ்சிசாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும். பசி இல்லை என்றால் இஞ்சியுடன், கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால்  நன்கு பசி எடுக்கும்.

ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும்.. தொண்டைவலி, ஆஸ்துமா  போன்ற நோய்களுக்கு அரு மருந்தாகும்.பித்தம் அதிகமாகி தலைசுற்றல் ஏற்பட்டால் வாழ்க்கையில் விரக்தி ஏற்படுவதுண்டு. எனவே, சுக்குத்துளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். மருத்துவகுணம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில் சட்னி, பொங்கல் போன்றவைகளில் சேர்த்து சாப்பிட்டால் பல்வேறு நோய்கள்  குணமாகிவிடும்.

வெள்ளைப்பூண்டு:

பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக்கூடியது. தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இதய  அடைப்பை நீக்கும். ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும். சளித்தொல்லையை நீக்கும். மலேரியா, யானைக்கால், காசநோய் எதிர்ப்பு சக்தி  அதிகரிக்கும்.சளித்தொல்லை இருந்தால் வெள்ளை பூண்டை பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டால் போதும். சளி தொல்லை  நீங்கும்.

ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் துளசி சாற்றை சாப்பிடுவது நல்லது. உடலில் தடைபட்டிருக்கும் ரத்த குழாயை துளசி சாறு குணப்படுத்தும். இதனால்  ரத்த அழுத்தம் குறைந்து விடும். நாம் அன்றாடம் சேர்த்துக்கொள்ளும் சில உணவுப்பொருட்களில் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது.  உணவில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோயைக் கட்டுப்படுத்தலாம். வெங்காயத்திலும், வெள்ளைப்பூண்டிலும்  உள்ள ‘செலினீயம்‘ என்னும் உலோகப்பொருள் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும்.

நரம்பு தளர்ச்சி நீங்க:

நரம்பு தளர்ச்சி சர்வ சாதாரணமாக எல்லோருக்கும் வருகிறது. மலச்சிக்கல், உறக்கமின்மை, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், சத்தான உணவை  உட்கொள்ளாமை போன்றவைகளால் நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க:

நன்றாக உறங்க வேண்டும்.மன அளவிலும், உடல் அளவிலும் உடலைப் பாதுகாக்க வேண்டும். உறங்குவதற்கு முன் அதிக நீரைப் பருக வேண்டும்.தூங்குவதற்கு முன் சூடான பானம் எதுவும் அருந்த கூடாது. தொண்டைப்புண்: தொண்டைப்புண், சளி போன்றவற்றால் அவதிப்படுவோருக்கு  பனங்கற்கண்டு, சிறிது மிளகு, சீரகம், விரலி மஞ்சள் துண்டு ஆகியவை உதவும்.மிளகு, சீரகத்தை வறுத்து பொடி செய்து  கொண்டு ஒரு டம்ளர்  தண்ணீரில் சிறிது மஞ்சளைப் பொடியாக்கிவிட்டு மேற்கண்ட எல்லாவற்றையும் போட்டு கொதிக்க விடவும். பின் ஒரு டீஸ்பூன் வெண்ணெய்யை  சேர்த்து கலக்கி குடித்தால் தொண்டையை தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கும் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு ஏற்படும்.

உடல் தளர்ச்சி:

வெங்காயத்தில் வைட்டமின் ஏ.பி.சி. ஆகியவை உள்ளன. உடல் தளர்ச்சியினால் ஏற்படும் உபாதைகள் நீங்கும். இருதயத்தை வலுப்படுத்தும். உடலுக்கு  சக்தியை அளிப்பதுடன் இழந்த சக்தியை திரும்பவும் தரக்கூடியது. இளமையைப் பாதுகாக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு வெங்காயம் அருமருந்து,  காரணம் வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது.

வயிற்றுப்புண்:

வயிற்றுப்புண் இருப்பவர்கள் பச்சரிசி, பாசிப்பருப்பு, வெந்தயம் ஒரு டீஸ்பூன், நிறைய பூண்டு போட்டு நன்றாக வேக வைத்து தேங்காய்ப்பால் கலந்து  சாப்பிட்டால் வயிற்றுப்புண்ணும், வாய்ப்புண்ணும் குணமாகிவிடும்.

வலிப்பு நோய்:

வலிப்பு வந்தவுடன் பார்லி அரிசியில் இளநீரையும், தேனையும் கலந்து சாப்பிட்டால் நரம்பு பலமடைந்து வலிப்பு குணமாகும்.

தலைவலி:

தலைவலி வந்தால் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாறு, இஞ்சிச்சாறு கலந்து சிறிது உப்புடன் சேர்த்துப் பருகினால் தலைவலி உடனே  குணமாகும்.

நெல்லிக்காய்:

நெல்லிக்கனியில் வைட்டமின் சி உள்ளது. ஆரஞ்சு பழத்தை விட சுமார்25மடங்கு சத்து அதிகமாக நெல்லிக்கனியில் உள்ளது. இக்கனியில் பாஸ்பரஸ், கால்சியம், புரதச்சத்து, கொழுப்பு, நீர்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளது. பல் தொடர்பான வியாதிகள், மலச்சிக்கல்,  எலும்புத்தாடை, நீர்த்தாரையில் உள்ள புண் போன்றவற்றை குணப்படுத்துவதில் இதன் பங்கு அதிகம். அதே போல் மூளைக்கோளாறு, இதய நோய்,  காசநோய், ஆஸ்துமா, நீரிழிவு போன்ற நோய்களை குணமாக்குவதில் இதன் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கற்றாழை

கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதில் வைட்டமின்கள், கனிம சத்துகள், புரோட்டீன்கள், என்சைம்கள்  சேர்த்து 70 வகையான மருத்துவ குணங்களுடைய உப பொருட்கள் உள்ளன. மொத்தத்தில் கற்றாழை உடலிற்கு எனர்ஜியை தரக்கூடியது. ரத்த  ஓட்டத்தை சீராக்குவது. மூளையில் ரத்தம் உறைந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு, அல்சர் போன்ற வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு, ஜீரண சக்திக்கு,  தோல் பாதுகாப்புக்கு, தோல் பளபளப்புக்கு கற்றாழை நல்ல பயன் தருகின்றது. தசைகள் மூட்டு இணைப்புகளில் திடத்தன்மை ஏற்படுத்துவதும்  கற்றாழைதான்.

2014-08-18 17:54 GMT+05:30 Kanagavel Jeyasankar <coronationfireworks@gmail.com>:
நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த பல வகையான உணவுகள் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. ஒருகாலத்தில் நம் முன்னோர்கள் உடல்சூட்டை தணிக்க நீர்மோர், கேழ்வரகுகூழ், போன்ற எளிய உணவுகளை சாப்பிட்டனர், இதனால மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கை நிலையை அடைந்தனர். தற்போது, வெயில் காலம் தொடங்கிவிட்டது. உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகுகூழின் விற்பனை ஒருபுறம் அமோகமாக இருக்க, ஒருபக்கம் குளிர்பான வியாபாரமும் களைகட்டி வருகிறது.

உடலுக்கும், மனதுக்கும் சக்தி கொடுக்கும் ஒரு ஜிலீர் பானம் தற்போது விற்பனையாகிக்கொண்டு இருக்கிறது. அதன் பெயர் ‘‘மோலாசம்’’, அது என்ன மோலாசம் என்ற கேள்வியோடு குளிர்பானக்கடையை நடத்திவரும் செல்வி என்பவரிடம் கேட்டோம், அது குறித்து ஆர்வத்தோடு அவர் கூறுகையில், வெள்ளை புட்டரிசி, பன்னீர், தேங்காய்பால், கல்யாண முருங்கை இலை, ஆகிய எளிய பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படுவதுதான் மோலாசம்.

இதை தினமும் குடித்து வந்தால் உடல்சூடு முழுவதும் குணமடையும், மேலும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், கண் எரிச்சல், அடிவயிற்று வலி, வயிற்றுபுண், உடல் சோர்வு, போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு சிறந்த இயற்கை மருந்தாக பயன்படுகிறது. இந்த பானத்தை வீட்டிலேயே தயாரிக்கலாம். மேலும் வெயில் காலத்திற்கு மிகவும் சிறந்த குளிர்பானவகை என்றார்.

செய்முறை: வெள்ளை புட்டரிசி (அ) உயர்தர பச்சரிசியை, பயன்படுத்துவதற்கு முன்பாக ஒருநாள் முழுவதும் பன்னீரில் ஊறவைக்கவேண்டும், அதில் கல்யாண முருங்கை இலைகளின் நரம்புகளை நீக்கி வெறும் இலைகள் மட்டும் 2ல் இருந்து 5 இலைகள் வரை சேர்த்துக்கொள்ள வேண்டும், மறுநாள் காலையில் பயன்படுத்தலாம். இதனுடன் தேவையான அளவு சர்க்கரை கலந்து தேங்காய்பால் ஊற்றி சாப்பிடலாம்.

2014-08-18 17:53 GMT+05:30 Kanagavel Jeyasankar <coronationfireworks@gmail.com>:
கோடை காலத்தில் நமது உடலில் உள்ள தாது உப்புக்கள் வியர்வை மூலம் அதிகமாக வெளியேறி விடுகிறது, அதனால் தான் நமக்கு விரைவில் சோர்வு ஏற்படுகிறது. இதற்கு செயற்கை குளிர்பானங்கள் எந்தவிதத்திலும் பலனளிக்காது. மேலும் கேஸ் அதிகமுள்ள குளிர்பானங்கள் உடலுக்குக் கேடு செய்யும். அதற்கு பதில் பழங்கள், சுத்தமான தண்ணீர் கொண்டு தயாரிக்கப்படும் பழரசங்கள், காய்கறி சாலட் இவை நல்ல பயன் தரும். அதுமட்டுமின்றி தேவையான விட்டமின்கள் மற்றும் தாது உப்புக்களுடன் உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவுகளை வீட்டிலே தயாரித்து சாப்பிடுவது மிக நல்லது.

கேழ்வரகு கூழ்

முதல் நாளே ஒன்றரை ஆழாக்கு மாவுடன் நாலரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். அரை ஆழாக்கு அரிசி நொய்யுடன் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். பாதி வெந்ததும் கரைத்த கேழ்வரகு மாவை ஊற்றிக் கைவிடாமல் கிளறவும். மாவு வெந்து பளபளவென்று வந்ததும் உப்பு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைக்கவும். மறுநாள் காலை கடைந்த தயிர், அரிந்த வெங்காயம் இரண்டையும் கலந்து சாப்பிடவும்.

கம்பங் கூழும் இதே முறையில் செய்து சாப்பிடலாம். இதுவும் உடலுக்குக் குளிர்ச்சியும் திடமும் சேர்க்கும்.

சுரைக்காய்க் கூட்டு

சுரைக்காயை சிறு துண்டுகளாக்கி தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைக்கவும். 200 மில்லி குளிர்ந்த பாலுடன் ஒரு மேசைக் கரண்டி அரிசி மாவைக் கரைத்து ஊற்றவும். கொஞ்சமாக உப்புச்
சேர்க்கவும். எண்ணெயில் சீரகம், மிளகாய் 4, பூண்டு 15 பல் மற்றும் கருவேப்பிலைச் சேர்த்து தாளிக்கவும். மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும். நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய் வெயிலுக்கேற்ற சிறந்த உணவாகும்.

வடுமாங்காய் தயிர்பச்சடி

2 மாங்காய்களை பொடியாக நறுக்கி, 2 பச்சை மிளகாய், துருவிய தேங்காய் அரை மூடி, ருசிக்கேற்ப உப்பு சேர்த்து அரைக்கவும். கடுகு, கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பரிமாறுவதற்கு முன் புளிப்பில்லாத தயிர் சேர்த்து கலக்கவும். விட்டமின் நிறைந்தது இந்த உணவு.

மாங்காய்-நெல்லிக்காய் மோர்

ஒரு பெரிய நெல்லிக்காயின் விதையை நீக்கி, மாங்காய் கால் துண்டு, கொத்துமல்லித் தழை கைப்பிடி அளவு, இஞ்சி சிறிதளவு, கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கால் லிட்டர் தயிர் மற்றும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைக்கவும். பின்னர் வடிகட்டி கடுகு, பெருங்காயம் தாளித்து அருந்தவும். இதிலுள்ள விட்டமின் சி உடலுக்கு உடனடி எனர்ஜி அளிக்கக் கூடியது.

மோர்க் குழம்பு

ஒரு ஸ்பூன் அரிசியை ஒரு ஸ்பூன் துவரம் பருப்புடன் நன்கு ஊற வைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகு, கொஞ்சம் இஞ்சி, 4 பச்சை மிளகாய் வதக்கி சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். கடாயில் கடுகு, சீரகம், கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து பூசணிக்காயை சிறிய துண்டுகளாக்கி நன்கு வதக்கி அரைத்து வைத்துள்ள அந்த கலவையை சேர்த்து சிறிது வேகவிட வேண்டும். பின்னர் தண்ணீர் ஊற்றாமல் கடைந்த தயிருடன், மஞ்சள் தூள், உப்புச் சேர்த்து அந்த கலவையில் ஊற்றி ஒரு கொதி விடவும். இறக்கும் போது கொத்துமல்லித் தழைச் சேர்த்து இறக்கி வேண்டுமானால் கூட கொஞ்சம் கெட்டித் தயிர் சேர்த்து சாப்பிடலாம். நீர்க்காயான பூசணி வெயிலுக்கேற்றது

No comments:

Post a Comment